search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனையாளர்கள்"

    • ஆவின் ஐஸ்கிரீம் விநியோகம் செய்ய விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
    • விவரங்களுக்கு 98942 04423, 78459 59109, 96291 78789 என்ற ஆவின் அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் ஆவின் அலுவலக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் பெற கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு 98942 04423, 78459 59109, 96291 78789 என்ற ஆவின் அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • வர்த்தக சங்க நிர்வாகிகள் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் குப்பை மேலாண்மை தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகளை கட்ப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் ராஜகோபாலன், மேலாளர் காதர் கான், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் முன்னிலை வகித்தனர். கணக்கர் ராஜ கணேஷ் வரவேற்றார்

    சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் வர்த்தக சங்க செயலாளர் துரைராஜ் பொருளாளர் ஹரக்சந்த் நிர்வாகிகள் புக்ராஜ் ராஜ்குமார் சந்துரு வினோத் ஜெர்ரிஅகஸ்டின்தாஸ் முரளி மற்றும் சீர்காழி தாலுக்கா மொபைல் விற்ப்பனையாளர்கள் மற்றும் பழுது நீக்குவோர் சங்க தலைவர் மார்க்ஸ்பிரியன் மற்றும் வர்த்தகசங்க நிர்வாகிகள்கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவின் நிறைவு நாளில் “மானுடம் வெல்லும்” என்ற தலைப்பில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.
    • மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தை விளக்கி பேசினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. நாகையில் நடத்தப்பட்ட முதல் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், "மானுடம் வெல்லும்" என்ற தலைப்பில் நாகை எம்.எல்.ஏ முகமது ஷாநவாஸ் பேசினார்.நாகூர் தர்கா, வேளா ங்கண்ணி தேவாலயம், சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய மூன்று திருத்தலங்களுக்கும் மதங்களை கடந்து மக்கள் வந்து செல்வதன் மூலம் மானுடம் வென்றது. மண்டைக்காடு கலவரத்தின் போது இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த, சைவ மடாதிபதியான குன்றக்குடி அடிகளார் மீன் கூடையை சுமந்து சென்றதையும், மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தையும் விளக்கிப் பேசினார்.

    புத்தக திருவிழா ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

    ×