search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனையகம்"

    • கரூர் ஜங்ஷனில் முருங்கை இணைப் பொருட்கள் விற்பனையகம் திறக்கப்பட்டது.
    • வாழைப்பொருட்கள் விற்பனையகம் தொடங்கப்பட்டது

    கரூர்:

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய ரயில்வே துறை சார்பில் சுயஉதவிக்குழுக்கள், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்களை ஊக்கும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அந்த ஊரின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின்

    அடிப்படையில் அந்தந்த பகுதி சிறப்பை வெளிப்படுத்தும் பொருட்கள் ரயில் நிலையங்களில் விற்க அனுமதிக்கப்படுகிறது. கரூர் ரயில் நிலைய சந்திப்பில், ஈசநத்தம் வேளாண் உற்பத்தியாளர்கள் சார்பில் முருங்கை இணைப் பொருட்கள் விற்பனையகம் திறக்கப்பட்டது.

    கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன், முதன்மை வணிக ஆய்வாளர் சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கடைகளுக்கு 15 நாட்களுக்கு ரூ.1,000 என்ற வாடகையில் அனுமதி வழங்கப்படுகிறது. 15 நாட்களுக்கு வேறு பொருள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும். குளித்தலை ரயில் நிலையத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சார்பில் வாழைப்பொருட்கள் விற்பனையகம் தொடங்கப்பட்டது.

    ×