search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள் போராட்டம்"

    • கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களை குறிவைத்து அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் இருந்தன.

    இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக திருவிழா காலங்களில் பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களும், அலகு குத்திவரும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர். குறிப்பாக 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்ததால் அதனை அகற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கோவிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கிரிவலப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரிவலப்பாதையில் உள்ள 9 சந்திப்புகளில் 7 இடங்களில் தனியார் வாகனங்கள் நுழைவதை தடுக்க தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டது. கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கோர்ட்டு உத்தரவின் படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்காமல் கிரிவலப்பாதையை அடைக்கும் முயற்சியில் உறுதியாக இருந்தனர்.

    இதனால் இன்று அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில்,

    பக்தர்களின் வருகையால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. தற்போது பாதையை அடைத்து விட்டதால் எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய போதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நிலை குறித்து எடுத்தரைத்தும் அதனை பரிசீலனை செய்யவில்லை. இதனால் கருப்புக்கொடியுடன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

    எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
    • இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி. பூ மார்க்கெட் இயங்கி வந்தது. இதற்காக தற்காலிக ஷெட் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

    தற்காலிக கடைகள்

    இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்கு பூ மார்க்கெட் வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறு வழி இல்லாமல் அங்கேயே கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வியாபாரம் பாதிப்பு

    காலை மற்றும் மாலை நேரங்களில் வளாகத்திற்குள் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பூக்கடைகளும் இருப்பதால் வாடிக்கையாளர் தங்கள் கடைக்கு வருவது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் கடை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உடனடியாக பூக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தர்ணா போராட்டம்

    ஆனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் வணிக வளாக வியாபாரிகள் கடையை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து வணிக வளாக வியாபாரிகள் இன்று வணிக வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலம் மாநகராட்சி வணிக வளாகப் பகுதியில் பூக்கடைகள் வைக்க அனுமதி அளித்ததால் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

    வாடிக்கையாளர் குறைவு

    இது குறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி வணிக வளாகமும், பூ மார்க்கெட்டும் ஒரு இடத்தில் செயல்படுவதால் வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வணிக வளாகத்தில் உள்ள பூக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வணிக வளாகத்தை காலி செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.

    பேச்சுவார்த்தை

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பூ மார்க்கெடடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுவரையில் பொறுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சில் உடன்படாத வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
    • பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள், நடைபாதை கடைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பழண்டி அம்மன் கோவில் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு ஆகிய சாலைகள் உள்ளன. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

    இதை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள், நடைபாதை கடைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கடைகளுக்கான டெண்டர் கடந்த 10-ந் தேதி விடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
    • அ.தி.மு.க சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக கடைகளை கட்டியிருந்தது.இந்த கடைகள் இங்கு இருக்கக்கூடிய 120 சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவதாக நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கடைகளுக்கான டெண்டர் கடந்த 10-ந் தேதி விடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    ஆனால் இந்த அறிவிப்பை சாலையோர வியாபாரிகளுக்கு யாருக்கும் தெரிவிக்கவில்லை எனக் கூறி சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அ.தி.மு.க மாவட்ட செயலாளரை சந்தித்து டெண்டர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்தனர்.

    இதனை கேட்டறிந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் இது குறித்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் நகராட்சி ஆணையாளர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க சார்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தார்.

    • நகராட்சி தினசரி மார்க்கெட்டில் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைத்து கடைக்காரர்களுக்கும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும்.
    • தினசரி மார்க்கெட் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், ஏற்கெனவே மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி மார்க்கெட்டை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.84 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, மார்க்கெட்டை கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடமாற்றம் செய்வதற்கு தடையாணை பெற்றனர்.

    இதையடுத்து, கூடுதல் பஸ் நிலையத்தில் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் வகையில், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில், மார்க்கெட் குத்தகைதாரர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நகராட்சி சேர்மன் கருணாநிதி தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசுகையில், கூடுதல் பஸ் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

    கூட்டத்தில், நகராட்சி கமிஷனர் பொறுப்பு பார்த்தசாரதி, தாசில்தார் சுசிலா, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகரமைப்பு அலுவலர் ரமேஷ்குமார், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    நகராட்சி தினசரி மார்க்கெட்டில் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைத்து கடைக்காரர்களுக்கும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும்.

    தினசரி மார்க்கெட் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், ஏற்கெனவே மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • தேவகோட்டையில் இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • தேவகோட்டை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வியாபாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி அதிகாலையில் கனகம்(வயது60), அவரது மகள் வேலுமதி (35), பேரன் மூவரசு(12) ஆகியோரை கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டி 60 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே வேலுமதி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கனகம் இறந்தார். பேரன் மூவரசுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    கனகத்தின் மகன் வெளிநாட்டில் இருந்த நிலையில் இறந்தவரின் உடல்களை 4 நாட்களாக உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் நாட்டார்கள் சட்ட ஒழுங்கு தலைவர் கே.ஆர். ராமசாமி, செந்தில்நாதன் எம்.எல்.ஏ. இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் காவல்துறைக்கு கோரிக்கைகளை வைத்தனர்.

    இந்த இரட்டை கொலை- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை பிப்ரவரி 1-ந்தேதிக்குள் கைது செய்யவில்லையென்றால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் எங்களது நிகழ்வுகள் நடக்கும் என தெரிவித்தனர்.

    மேலும் பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடு போனதால் குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்த நகைகளை நாட்டார்கள் வழங்கி குறிப்பிட்ட தேதியில் திருமணமும் நடந்தது. பிப்ரவரி 1-ந்தேதி சுபமுகூர்த்த தினங்கள் இருந்ததால் நாட்டார்கள் உண்ணாவிரதத்தை 7-ந் தேதி நடைபெறுவதாக அறிவித்தனர்.

    அதன்படி இன்று தேவகோட்டையில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு தேவகோட்டை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மருந்து கடைகள், தினசரி காய்கறி கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தியாகிகள் பூங்கா அருகே சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற உண்ணாவிரதமும் நடந்தது. திரளானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளதால் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்து மாற்றம் செய்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். 

    • இ-நாம் திட்ட செயலில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்
    • கொள்முதல் நிலையம் ெவறிச்சோடியது

    வந்தவாசி:

    விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களுக்கான கட்டுப்படியான விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு இ நாம் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தில் பதிவு பெற்ற வியாபாரிகள் இந்த திட்ட செயலி மூலமே நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய இயலும். இந்த செயலியில் எந்த வியாபாரி ஏலம் அதிக மாக நிர்ணயம் செய்கிறாரோ அவருக்கே அதற்கான விளை பொருட்கள் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் வந்த வாசி ஒழுங்குமுறை விற்பனை கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் இணைக்கப்பட்டு, இந்தசெயலிமூலம் வேளாண் விளைபொருட் கள் கொள்முதல் நடந்து வரு கிறது.

    இந்த நிலையில் இந்ததிட்ட செயலியில் சில திருத்தங் களை செய்யக்கோரி வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நேற்று நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    முன்னர் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட் டைகளுக்கு நாங்கள் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்த பின்னர், அந்த நெல்லை எங்கள் கோணிப் பைகளுக்கு மாற்றுவோம். அப்போது தரம் இல்லாத நெல் கலப்படம் செய்யப் பட்டு இருந்தால் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயியை அழைத்து பேசி தீர்வு காண்போம்.

    ஆனால் இப்போது இந்த செயலி மூலம் கொள்முதல் நடைபெறும் போது இது போன்று பேசி தீர்வு காண் பது இயலாததாகவே தோன்றுகிறது. எனவே விவசாயிகள் கொண்டு வரும் விளைபொ ருட்களுக்கு நாங்கள் விலை நிர்ணயம் செய்யும் முன்னர், இந்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகமே வேறு கோணிப் பையில் மாற்றி கலப்படம் இருந்தால் கண்டறிய வேண்டும்.

    மேலும் விளைபொருட்களுக்கான விலையை நாங்கள் இந்த செயலியில் பதிவு செய்யும் போது தவறுதலாக அதிக தொகை குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டால் எங்களால் அதை மாற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு நஷ்டமே ஏற்படும். எனவே, வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்து இந்த செயலியில் உரிய திருத் தங்கள் செய்யக்கோரி நெல் கொள்முதலை நிறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பரமேஸ்வரி கூறியதாவது:-

    விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விளை பொருட்களை எடுத்து வந்தவுடன் அவற்றின் ஈரத் தன்மை, தரம் ஆகியவற்றை நாங்களே பரிசோதனை செய்து இ-நாம் செயலில் பதி வேற்றிவிடுவோம்.

    குற்றவியல் நடவடிக்கை இந்த செயலி மூலம் நாட் டின் எந்த மூலையில் இருந் தும் வியாபாரிகள் வீட்டில் இருந்தபடியே எந்த ஒரு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருந்தும் விளை பொருட்களை கொள்முதல் செய்ய இயலும்.

    விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களில் கலப்படம் கண்டறியப்பட்டால் அதற்கான ஏலம் ரத்து செய்யப்படும். மேலும் கலப்பட பொருட் கள் எடுத்து வரும் விவசாயி கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வியாபாரிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்த விவசாயிகள் விளைபொருட் களை கொண்டு வராததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது.
    • சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது.

    ஆலங்குளம்:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் கேரளா செல்ல முக்கிய பாதையாக நெல்லை-தென்காசி சாலை உள்ளது.

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் கனரக வாகனங்கள், சிமெண்ட், காய்கறிகள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகவும் இச்சாலை காணப்படுகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இச்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி ரூ. 430.71 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக காமராஜர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    மேலும் சிலை அமைக்க மாற்று இடம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதைத்தொடர்ந்து காமராஜர் சிலை அமைப்புக்குழு, வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இதில் காமராஜர் சிலை அமைக்க மாற்று இடம் வழங்கக்கோரி இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று ஆலங்குளம் காய்கறி மார்க்கெட், பஜார் உள்ளிட்ட பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து வியாபாரிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் தாசில்தார் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது யூனியன் அலுவலகம் அருகே உள்ளிட்ட 3 இடங்களில் காமராஜர் சிலை அமைக்க மாற்று இடமாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகே மாற்று இடத்தை வழங்க வேண்டும் என சிலை அமைப்பு குழுவினர் கூறினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • சூழல் உணர்திறன் மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
    • தமிழக அரசு சூழல் உணர்திறன் திட்டத்தை கைவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டி:

    நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பக எல்லையில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பதாக கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

    இது தொடர்பாக ஆய்வு நடத்தி, 3 மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

    சூழல் உணர்திறன் மண்டலம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, புத்தூர் வயல், அள்ளூர் வயல் உள்பட பல கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதனால் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    சூழல் உணர்திறன் மண்டலத்தை கைவிடவேண்டும். மேலும் மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.

    நேற்று முன்தினம் கூடலூர் மற்றும் ஸ்ரீமதுரை பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடலூருக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் புதிய பஸ்நிலையம் முனை சந்திப்பு, ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி திடலுக்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று சூழல் உணர்திறன் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தொகுதியில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக கூடலூர் வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை சூழல் உணர்திறன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடலூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மளிகை கடைகள், செல்போன் கடைகள், வணிக வளாகங்கள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடை வீதிகள், முக்கிய பகுதிகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

    அப்போது அவர் கூறுகையில், சூழல் உணர்திறன் மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

    இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அ.தி.மு.க சார்பில் கண்டன பேரணி நடக்க உள்ளது. இதேபோல் அடுத்த மாதம் 5-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கூடலூர் காந்தி மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டமும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஏலம் விடவில்லை என கூறப்படுகிறது.
    • திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா மற்றும் கோயில் இணை ஆணையரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.

    21-ந் தேதி அஸ்வினி விழாவும், 22-ந் தேதி பரணி விழாவும், 23-ந் ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பல் விழாவும் 24-ந் தேதி இரண்டாம் தெப்பல் விழாவும், 25-ந் தேதி மூன்றாவது தெப்பல் விழாவும் நடைபெறுகிறது.

    இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் பக்தியுடன் வழிபடுவார்கள். திருத்தணி மலையில் உள்ள பழக்கடை, பூக்கடை, பிரசாத கடை, டீக்கடை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றவும் திருத்தணி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் எடுக்க முயற்சித்தது.

    ஆனால் வழக்கமாக கடை நடத்த ஏலம் விடப்பட்டு அதன் அடிப்படையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள வியாபாரிகள் கடையை நடத்தி வந்துள்ளனர்.

    தற்போது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஏலம் விடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு கடையை அகற்ற கோவில் நிர்வாகம் முற்பட்டதால் வியாபாரிகள் கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா மற்றும் கோயில் இணை ஆணையரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி அதனால் நூற்றுக்கணக்கானோர் பிழைத்து வரும் நிலையில் கடையை இடிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் திருத்தணி மலைப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநகராட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு சந்தைக்கும் தனித்தனியே விதிகளை மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றுகிறது
    • மார்க்கெட்டுக்குள் சுங்கவரி இரண்டு மடங்காக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி பகுதியில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு அங்கு காய்கறி வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த மார்க்கெட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள எம்.ஜி ஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கு பதிலாக சில்லறை விற்பனை நடைபெற்று வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

    மேலும் மார்க்கெட்டுக்குள் சுங்கவரி இரண்டு மடங்காக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்திருந்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து இன்று அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மார்க்கெட்டில் கருப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வியாபாரிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ராமநாராயணன் கூறும்போது, மார்க்கெட்டில் காய்கறிகள் ஏற்றிவரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ரெண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சூழலில் மொத்த சந்தையில் சில்லறை வியாபாரத்தையும் தொடங்கியுளளதால் அண்ணா காய்கறி சந்தையை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

    கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு சந்தைக்கும் தனித்தனியே விதிகளை மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றுகிறது என்றார்.

    வியாபாரிகளின் இந்த உள்ளிருப்பு போராட்டம் காரணமாக அண்ணா தினசரி காய்கறி சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×