search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி வீடு"

    • ஏர்வாடியில் வீடு புகுந்து நகை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ஸ்டேசனரி கடை வியாபாரம் செய்து வந்தவர் வீட்டில் திருட்டு நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன், இவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை சென்று தனது மகள் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.

    இவரது மகன் நசீர் அகமது தனது பெற்றோர் வீட்டின் அருகில் ஸ்டேசனரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். நாள்தோறும் கடையை அடைத்து விட்டு திரும்பும் போது தந்தையின் வீட்டை பார்த்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது தந்தை வீட்டை பார்த்தபோது வெளிக்கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நசீர் அகமது வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அவரது தாயாரின் 7 ½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

    ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×