search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான நிலைய அதிகாரிகள்"

    சி.பி.ஐ. சோதனை எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #TrichyAirport #GoldSmuggling
    திருச்சி:

    திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் சிலர், சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சிங்கப்பூர் தனியார் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் முழுவதையும் சோதனை நடத்தினர். சில பயணிகளை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



    விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்வதற்கும், தங்கம் கடத்தலுக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இதில் தொடர்புடைய திருச்சி விமான நிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப் பாளர்கள் கலுகாசல மூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ் பெக்டர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேரும், பயணிகள் 13 பேரும் சிக்கினர். அவர்கள் 19 பேர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

    கைதான அனைவரும் மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் சி.பி.ஐ. சோதனை எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி திருச்சி சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 39 பேர், விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருச்சி தவிர வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார்.

    மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் அந்தந்த இடங்களில் நாளை 12-ந் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த் யாதவ், யதுவேந்தர்சிங் ஆகிய 5 பேரும், கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ் குமார் கேசன் ஆகியோரும் புதிதாக பொறுப்பேற்க உள்ளனர். #TrichyAirport #GoldSmuggling
    ×