search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநியோகம்"

    • சென்னிமலை பேரூராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
    • இல்லை என்றால் பொதுமக்கள், முருக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோபாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சத்தி ரசேகர் தலைமையில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னிமலை பேரூ ராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சென்னிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டித்ததை மீண்டும் வழங்க வேண்டும்.

    இதை உடனடியாக 2 வாரங்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள், முருக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதில் அவைத்தலைவர் ஆதவன், துணை செய லாளர் சாவித்திரி, பொரு ளாளர் காவேரி ரங்கன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கோபால கிருஷ்ணன், ஜம்பு என்கிற சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மாரப்பன், மெட்றோ டெக்ஸ் தலைவர் கோவிந்தசாமி,

    முன்னாள் பேரூர் செயலாளர் கொங்கு கந்தசாமி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், மகளிரணி சாந்தி, வார்டு செயலா ளர்கள் சூளை ஈஸ்வரன், ரமேஷ், சுப்பிரமணி, கே.அண்ணா துரை,

    பழக்கடை குமார், தாரை. லட்சு மணன், லோகு, பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, ரமேஷ், திருநாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×