search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதை பண்ணை"

    • விதை முளைப்பு திறன் மற்றும் பாரம்பரிய ரகங்களை விதைப்பண்ணையில் சாகுபடி செய்வது பற்றி வலியுறுத்தினர்.
    • தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் தலைமையில் நடைப்பெற்றது.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி பயிற்சியின் நோக்கம் மற்றும் விதைப்பண்ணையின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.பயிற்சியில் சிறப்பு விருந்தினராக ஓன்றியக்குழு உறுப்பினர் சரவணன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். திருச்செங்காட்ங்குடி ஒன்றியத்குழு உறுப்பினர் இளஞ்செழியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி ஆகியோர் விதை முளைப்பு திறன் மற்றும் பாரம்பரிய ரகங்களை விதைப்பண்ணையில் சாகுபடி செய்வது பற்றி வலியுறுத்தினர்.

    விதை சான்று அலுவலர் மாறன் விதைப்பண்ணையில் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் பற்றியும் மற்றும் தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார். தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், தோட்டக்கலைத்துறை சார்பான திட்டங்கள் பற்றி விவசாயிகளிடம் விளக்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயராமன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×