search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பிக்கலாம்"

    • 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது
    • சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

      திருப்பூர் : 

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் (SOP) www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிகல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரியகல்வி சான்றிதழ்களை இணைத்து 3.10.2023 தேதிக்குள் திருப்பூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் காத்திருக்கும் இளை ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதா ரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதி வினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச் சான்று கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை ஆகிய வற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடைய லாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ராமநாதபுரத்தில் விதைப்பண்ணை அமைக்க பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. ஆகவே விவசாயி களுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது மாவட்ட த்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதை யின் உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.ராமநாத புரம் மாவட்டத்தில் 86 கிராமங்கள் கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நெல் விதைப் பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதார நிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி விதை அலுவலர்களை அணுகி பெற்றிடலாம். கோ 51, ஏ.டி.டீ. 45, ஆர்.என்.ஆர் 15,048 போன்ற குறுகிய கால நெல் விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகிய வற்றை விதை அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப் பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும். நெல் விதைப் பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதை அறிக்கைக்கு பதிவுக் கட்டணம் ரூ. 25-ம், வயலாய்வுக் கட்டணமாக ரூ 100-ம் விதை பரி சோதனைக் கட்டணமாக ரூ.80-ம் செலுத்தி நெல் விதைப் பண்ணை அமைத்து லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் ஆர்வலர்களுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டி னை பெருமைப்படுத்து முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

    "தமிழ்ச்செம்மல்" விருதாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசுத்தொகையும் தகுதி யுரையும் வழங்கப்பெற்று வருகின்றன.

    இவ்வகையில் 2023-ம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருதுக்கான விண்ணப் பங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக் குறிப்பு, நூல்கள், கட்டுரை கள் ஏதேனும் வெளியிடப் பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் இரு படிகள் இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்கப் பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்க ளுடன், ஆற்றிய தமிழ்ப்பணி களுக்கான சான்றுகளையும் இணைத்து ராமநாதபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 6-ந்தேதிக்குள் கிடைக்கப் பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியா கவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.

    மேலும் விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு 04567-232130 என்ற தொலைபேசி எண்ணிலோ, 99449 69642 என்ற எண்ணிலோ அல்லது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • ஆகஸ்டு 2018 வரை எஸ்.சி.வி. டி. சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திலோ அல்லது 04652-264463, 9443579558 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும். அகில இந்திய தொழிற்தேர் வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. முதல் 3 வகைகளில் தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்கள். திறன்மிகு தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்கள். ஆகஸ்டு 2018 வரை எஸ்.சி.வி. டி. சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் 4-வது வகையில் பிற விண்ணப்பதாரர்க ளுக்கு 18.9.2023 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

    தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும் விண்ணப்பத்தாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகு தியை பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்ப தாரர்களுக்கு முதனிலைத்தேர்வுகள் கருத்தியல் பாட தேர்வு 10.10.2023 மற்றும் செய்முறை தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் கிண்டியில் உள்ள அர சினர் தொழிற்ப யிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் சுலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறு பவர்கள் ஜூலை 2024-ல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு ஆகியவற்றை

    www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதி விறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான கட்ட ணத்தை (ரூ.200) karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியா கவோ அல்லது தமிழக அர சின் கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ இ-செல்லான் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் இ-செல் லாள், கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றுடன் 19-த் தேதிக்குள் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்களை கோணத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத் திலோ அல்லது 04652-264463, 9443579558 என்ற தொலை பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தால் 2023ஆண்டிற்கான இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி வாயிலாக வருகிற செப்டம்பர் 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம். இது குறித்து மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • விருதுநகர் மாவட்டத்தில் நவீன சலவை கூடங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
    • குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

    குழு உறுப்பினர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். குழுவில் 10 நபர்கள் இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    விருப்பமும், முன் அனுபவமுள்ளவர்கள் குழுவாக சேர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட நர்சிங் படித்த மகளிர் விண்ணப்பம் செய்யலாம்.
    • இந்நிறுவன வலைத்த–ளமான www.omcnanpower.com-ல் கண்டு பயனடை–யுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி–ரன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

    தமிழக அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சார்பாக செவிலியர் பணிக்காலியிட அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. அதில் சவுதி அரே–பிய அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி–புரிவதற்கு குறைந்த–பட்சம் இரண்டு வருட பணி அனுப–வத்துடன் பி.எஸ்சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்ப–டுவதாகவும் சான்றி தழ்களில் சான்றொப்பம் பெற்றவர் கள் உடனடியாக விண்ணப் பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்படி பணியா–ளர்களுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம், உணவுப்படி, இருப்பிடம், விமானப்பய–ணச்சீட்டு ஆகியவை அந் நாட்டின் வேலைய–ளிப்போ–ரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்படி பணிக்கு ராம நாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் 05.09.2023 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவ னத்தால் பதிவு முகாம் நடைபெறுகிறது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தி–னைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உடைய பி.எஸ்சி. நர்சிங் படித்த மகளிர் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இம்முகா–மில் கலந்து கொண்டு தங்க ளது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் இந்த முகாமிற்கு வரமுடியாதவர்கள் தங்களு–டைய சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்படி வத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கு மாறு கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக் கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

    இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்கா–லியிடங்கள் குறித்த விவரங் கள் இந்நிறுவன வலைத்த–ளமான www.omcnanpower.com-ல் கண்டு பயனடை–யுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் ஊதி யம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறு வன தொலைபேசி எண்க ளின் (95662 39685, 63791 79200) (044-22505886, 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • பெண் குழந்தைகளுக்கான வீரதீர செயல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • ராமநாதபுரம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 31-ன்படி 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது, ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.

    இந்த விருதுக்கான விண்ணப்பங்களை வருகிற அக்டோபர் 27-ந் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலு வலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் துறையின் கீழ் விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 28 ஊரக இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்ப பயிற்சி 28.8.23 முதல் 2.9.23 வரை 6 நாட்கள் அருப்புக்கோட்டையில் உள்ள கோவிலாங்குளம் நிலையத்தில் வேளாண் அறிவியல் பயிற்சி நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் கல்வி தகுதி குறைந்தது 5ம் வகுப்பு மேல் படித்தவராகவும், கற்றுக்கொண்ட தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில் ஆர்வமுடையவராகவும் இருக்க வேண்டும்.

    இப்பயிற்சியானது வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் காளான் தொழில் முனைவோர் ஆகியோர் மூலம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் அவர்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு புதிய தொழில் முனைவோராக மாறிட, வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • 79 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, கடந்த 18 -ந்தேதி முதல் 20-ந் தேதி வரை இரண்டாம் கட்டமாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி விடுபட்டுப் போனவர்கள், அரசு அறிவிப்பின்படி முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுபவர்கள் உள்ளிட்டோரும் விண்ணப்பித்தனர்.

    இதன் அடிப்படையில் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4,02,617 குடும்ப அட்டைகளில், 3,18,045 குடும்ப அட்டைதார்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதாவது 79 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது. அதன்பின் தேவைப்படும் விண்ணப் பங்கள் மட்டும் அரசு அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளன.

    கிராமப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவ லர்கள், கிராம வருவாய் உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களும், நகர் பகுதிகளில் பில் கலெக்டர்களும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை, ராமேசுவரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 9 தாலுகாக்களில் கள ஆய்வில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள 775 ரேஷன் கடைகளுக்கு தலா ஒருவர் வீதம் 775 கள ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
    • 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

    விருதுநகர்

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான தையல் தொழிலில் முன் அனுபவமும் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    10 நபர்கள் கொண்ட குழுவாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான குழுக்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

    பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:-

    குறைந்தபட்சம் வயது 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கலாம்.

    விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

    குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பி னைச் சார்ந்த மக்கள் குழுவாகக் கொண்டு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×