search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பதாரர்கள்"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு 9 ஆயிரத்து 990 பேர் எழுதுகின்றனர்.
    • தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் 2022-ம் ஆண்டி ற்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு 10 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 990 (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

    தேர்வு எழுதும் மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதம் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    எழுத்து தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்ப தாரர்கள் காலை 8.30 மணி முதல் தங்களுக்குரிய தேர்வு மையத்தில் அனு மதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கும். எக்காரணத்தை கொண்டும் காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள்.

    விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் தேவையற்ற பொருட்கள் தேர்வு மையத்திற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது.

    விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா மற்றும் அட்டை, ஒரு புகைப்படம், ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஆகியவை மட்டும் கொண்டு செல்ல அனு மதிக்கப்படும்.

    தேர்வு மையங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வு மையங்களில் காப்பி அடிப்பது, ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றபடுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 207மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை 68,244 பேர் எழுதுகின்றனர்.
    • விழுப்புரம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி ,உள்ளிட்ட 9 வட்டங்களில் தேர்வு நடக்கிறது.

    விழுப்புரம்:

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி முடிவடைந்தது. குரூப் 4 தேர்வுக்கு இதுவரை சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி, ஆண் விண்ணப்பதா ரர்கள் சுமார் 9,26,583 பேரும், பெண் விண்ண ப்பதாரர் 12,58,616 பேரும், 129 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவார்கள். விழுப்பு ரம்மாவட்டத்தில் 207தேர்வு மையங்களில் 68244 பேர் நாளை தேர்வு எழுத உள்ளனர் விழுப்புரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    விழுப்புரம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி ,உள்ளிட்ட 9 வட்டங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்டவருவாய் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் பொறுப்பு பரமேஸ்வரிசெய்து வருகிறார்,தேர்வு மையங்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் ஒன்றியம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

    • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுடன், கணினி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    • கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பதுடன் 40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும் ஆகியவற்றிற்கு உதவியாளர் (ம) கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு (2 பணியிடங்கள்) மாதம் ரூ.9000- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும்.

    மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நியமணம் செய்யப்படும்போது 40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப படிவத்தை மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில் (http://mayiladuthurai.nic.in) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் . அல்லது மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

    தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2, திருமஞ்சனவீதி, திருஇந்தளுர், மயிலாடுதுறை - 609001 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.07.2022 ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக–த்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
    • தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்புக்கடிதத்துடன் வர வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பரமக்குடி ஆயிர வைஸ்யா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் வாணி வேலுமாணிக்கம் மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் மேல்நிலைப் பள்ளி, ஆகிய 7 கல்லூரி மற்றும் பள்ளிகளில் 2022-ம் ஆண்டிற்கான சப்-இன்ஸ்பெக்டர் (ஆண் மற்றும் பெண்) பணிக்கு 5,942 விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) மெயின் எழுத்துத் தேர்வு காலை 10மணி முதல் 12.30 வரையும், தமிழ் தகுதித் தேர்வு பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணி வரையும் நடைபெற உள்ளது.

    தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்புக்கடிதத்துடன் வர வேண்டும். அழைப்புக்கடிதத்தில் புகைப்படம் இல்லாமலோ அல்லது தெளிவாக இல்லாமலோ இருந்தால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று கொண்டு வரவேண்டும்.

    அரசால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று (ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது மற்றும் பிற) கொண்டு வரவேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.

    எந்த காரணத்தை கொண்டும் காலதாமதாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளுடூத், கால்குலேட்டர் போன்ற மின்னனு சாதனங்கள் கொண்டுவர கண்டிப்பாக அனுமதி இல்லை.

    விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வரும்பொழுது அழைப்புக்கடிதம், நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை ஆகியவற்றை தவிர வேறு ஏதும் கொண்டுவர கட்டாயமாக அனுமதி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகர் ஊரமைப்புத்துறை அலுவலர்களுக்கு ஆன்-லைன் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
    • முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகர் ஊரமைப்புத்துறை அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது. இதனை இணை இயக்குநர் சங்கரமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மேலும், இணையதளம் வாயிலாக மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசுக்கான கட்டணங்களை செலுத்துதல், அரசு உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, அலுவலக பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ×