search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதிகளில் சேர"

    நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் -18, மாணவிகளுக்கான விடுதிகள்-5, கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகள்-3 மற்றும் மாணவி–களுக்கான விடுதிகள்-2 என மொத்தம் 28 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியா் கல்லுரி விடுதிகளில் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா். இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுவர். சோ்க்கை பெறுவோருக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.

    10-ம் வகுப்பு வரை பயிலுவோருக்கு சீருடைகள், சிறப்பு வழிகாட்டி புத்த–கங்கள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். இதற்கான தகுதிகளாக, பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதிமுறையானது மாணவிகளுக்கு பொருந்தாது.

    தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி பாதுகாவலரிடமும், மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் ஜூன் 30- க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொருத்தவரை ஜூலை 31க்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.

    மாணவ, மாணவியா்கள் விண்ணப்பிக்கும்போது ஜாதி, பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைத் தொழிலாளா்கள் தங்கி பயில்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×