search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைப்பழத்தில்"

    • அரச்சலூர் அருகே கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி வாழைப்பழத்தில் விஷமாத்திரை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த கண்டிகாட்டுவலசு, புது வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி.

    மணிக்கு கடந்த ஒரு வருடமாக கழுத்து வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் முதலில் நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் கழுத்து வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது மணிக்கு திடீரென கழுத்து வலி அதிகமாக இருந்தது. இதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்த மணி வீட்டில் இருந்த வாழைப்பழத்தில் சல்பாஸ் மாத்திரை வைத்து சாப்பிட்டார்.

    இது குறித்து தகவல் தெரிந்ததும் அவரது மனைவி கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மணி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×