என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வாழப்பாடி கொலை
நீங்கள் தேடியது "வாழப்பாடி கொலை"
வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் 3 மாத குழந்தையை கொன்றதாக தந்தை மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் பூமலை. இவரது மகன் கேசவன்(33). தனியார் பால் பண்ணையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் கோலாத்துக்கோம்பை புதூர்கிராமத்தை சேர்ந்த பி.டெக். பொறியியல் பட்டதாரி பெண் அபிராமி (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
அபிராமி ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பதால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற அபிராமி, தனது மூன்று மாத ஆண் குழந்தைக்கு கீர்த்திவாசன் என பெயர் சூட்டி கொஞ்சி மகிழ்ந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கேசவன் தனது தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் சிலருடன் அபிராமியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் கேசவன் தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். மனைவி தன்னுடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கேசவன், தனது தாயுடன் சேர்ந்து தனது குழந்தையை தூக்கிக் சென்று விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை இறந்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே குழந்தை கீர்த்திவாசனை தூக்கிச் சென்ற கேசவன் துணியை வைத்து மூச்சை அடைத்து கொலை செய்து விட்டதாக அபிராமி, வாழப்பாடி போலீசில், நேற்றிரவு புகார் கொடுத்தார்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து போன குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை கொலை செய்ததாக கூறி கேசவன் மற்றும் மற்றும் அவரது தாய் லெட்சுமியையும் கைது செய்தனர்.
அ.தி.மு.க.வை சேர்ந்த லெட்சுமி வாழப்பாடி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் பூமலை. இவரது மகன் கேசவன்(33). தனியார் பால் பண்ணையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் கோலாத்துக்கோம்பை புதூர்கிராமத்தை சேர்ந்த பி.டெக். பொறியியல் பட்டதாரி பெண் அபிராமி (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
அபிராமி ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பதால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற அபிராமி, தனது மூன்று மாத ஆண் குழந்தைக்கு கீர்த்திவாசன் என பெயர் சூட்டி கொஞ்சி மகிழ்ந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கேசவன் தனது தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் சிலருடன் அபிராமியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் கேசவன் தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். மனைவி தன்னுடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கேசவன், தனது தாயுடன் சேர்ந்து தனது குழந்தையை தூக்கிக் சென்று விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை இறந்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே குழந்தை கீர்த்திவாசனை தூக்கிச் சென்ற கேசவன் துணியை வைத்து மூச்சை அடைத்து கொலை செய்து விட்டதாக அபிராமி, வாழப்பாடி போலீசில், நேற்றிரவு புகார் கொடுத்தார்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து போன குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை கொலை செய்ததாக கூறி கேசவன் மற்றும் மற்றும் அவரது தாய் லெட்சுமியையும் கைது செய்தனர்.
அ.தி.மு.க.வை சேர்ந்த லெட்சுமி வாழப்பாடி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X