search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபரை தாக்கியவர் கைது"

    • ஒரு கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
    • மாதேஷ்(35) என்ற வாலிபர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் அகரத்தை சேர்ந்தவர் மணிபாரதி. இவர் தனது உறவினர் செல்வராஜுடன் பாலக்குடி பகுதியில் உள்ள ஒரு கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாதேஷ்(35) என்ற வாலிபர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் செல்வராஜை தாக்கியுள்ளார்.

    காயமடைந்த செல்வராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மணிபாரதி தந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசை கைது செய்தனர்.

    ×