search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் சிறைபிடிப்பு"

    • மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
    • பன்றி வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்து பன்றி பிடிக்க வந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். இதற்காக பன்றிகளை பிடிக்க வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து பிடித்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பன்றி வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்து பன்றி பிடிக்க வந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.

    மேலும் அந்த வாகனத்தின் சாவியை பறித்து பேரூராட்சியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது பிடிக்கப்படும் பன்றியை தொலைதூரத்தில் விடாமல் விற்றுவிடுவதாக குற்றம்சாட்டினர்.

    • கடலூரில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்த அ.தி.மு.க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கடலூர் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அகற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து கடலூர் மாநகராட்சி சாலை ஓரத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று கடலூர் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அகற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது அ.தி.மு.க.வினர் வாகனத்தை மறித்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இது குறித்து கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் சேவல் குமார், பகுதி செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

    ×