search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன பிரசார இயக்கம்"

    • அரியலூரில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாகன பிரசார இயக்கம் நடைபெற்றது
    • ஊதியக்குழுவில் விடுபட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் ஏழு முனைகளில் இருந்து நடைபெறுகின்ற பிரசார பயண வாகனம் புதுக்கோட்டையில் துவங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று அரியலூர் மாவட்டத்திற்கு வந்தது.

    அங்கு ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாகனப் பிரசார இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் அம்சராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாவட்ட செயலளர் சிவகுமார், மாவட்ட துணைசெயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் பணி நீக்கம் காலமான 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்,

    அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி, ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், ஊதியக்குழுவில் விடுபட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜவேம்பு, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி, அனுசுயா, ரேடியோகிராபர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இளங்கீரன், எம்ஆர்பி செவிலியர் சங்க மாவட்ட தலைவர் செல்வி, மாவட்ட செயலாளர் ராகவன், கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் மதியழகன் மற்றும்ஜெயங்கொண்டம்,

    ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அரசு ஊழியர்களும் அரசு ஊழியர் சங்க மாவட்ட, வட்ட நிர்வாகிகளும் துறைவாரி சங்கங்களின் இதர மாவட்ட, வட்ட நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

    ×