search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் அச்சம்"

    • வரட்டுபள்ளம் அணை அருகே யானை கூட்டம் சாலையோரம் வந்து நின்று கொண்டிருந்தது.
    • இதனால் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் யானைகள், மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதியில் இருந்து தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிக ளுக்குள் வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுபள்ளம் அணை அருகே யானை கூட்டம் சாலையோரம் வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல வழி இன்றி அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே நின்று கொண்டிருந்தது.

    இதனால் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.

    எனவே இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்து றையினர் தெரிவித்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
    • செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிக அளவில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலமாக இருப்பதால் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கிறது. வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்கள் பழுதடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை யில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மழை காலமாக இருப்பதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மூலைக்கடையில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டது.
    • குடியிருப்புகளை முற்றுகையிட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சாலையில் உலா கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையில் குஞ்சப்பனை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு உள்ளன. அத்துடன் அடிக்கடி சாலையில் உலா வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் குட்டியுடன் 2 காட்டு யானைகள் நின்றன. குறுகிய வளைவில் யானைகள் நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். சாலையில் யானைகளை கண்டால் தொல்லை அளிக்கவோ அல்லது அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது. ஒலிப்பான்களை ஒலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். வாழை மரங்கள் சேதம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா பகுதிக்குள் இரவு காட்டு யானை புகுந்தது. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டது. கனகராஜ் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இரு்நத வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. பின்னர் மூலைக்கடை பகுதியில் வர்க்கீஸ் என்பவரது வீட்டின் நுழைவுவாயிலை காட்டு யானை உடைத்து, வளாகத்துக்குள் புகுந்தது. அங்கு வாழை மரங்களை சேதப்படுத்தியது. மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை தாக்க முயன்றது. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்ைட தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டினர். இதையடுத்து மூலைக்கடையில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ×