search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழியாக"

    • உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
    • உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-தஞ்சாவூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07325) வருகிற 20-ந்தேதி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3, 10, 17, 24-ந்தேதி ஆகிய 5 நாட்கள் இரவு 8.25 மணிக்கு உப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும்.

    மறுமார்க்கமாக தஞ்சாவூர்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

    இந்த ரெயில் இருமார்க்கமாகவும் ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, சிக்கபானவாரா, சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையம் பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திருச்சி போர்ட், திருச்சி சந்திப்பு, பூதலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    • இரவில் பெண்களை புற வழிசாலையில் இறக்கி விடுவதால் டாஸ்மாக் கடையை கடந்து 1.5 கி.மீ. தூரம் தனியே நடந்து ஊருக்குள் வர வேண்டும்.
    • இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் நேரம் காப்பாளர் நியமிக்க வேண்டும்.

    சேலம்:

    மல்லூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்து அலுவலர் , தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தில் ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி பேசியதாவது-

    அனைத்து பஸ்களையும் மல்லூர் வழியாக இயக்க வேண்டும், இரவில் பெண்களை புற வழிசாலையில் இறக்கி விடுவதால் டாஸ்மாக் கடையை கடந்து 1.5 கி.மீ. தூரம் தனியே நடந்து ஊருக்குள் வர வேண்டும், இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. டிரைவர், கண்டக்டர்கள் பெண்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும், அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு காமிரா பெருத்த வேண்டும் என்றார்.

    சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் பேசுகையில், மல்லூர் பஸ் டாப்பில் பஸ் பெயர், மல்லூர் வந்து செல்லும் நேரம் ஆகியவை அடங்கிய கால அட்டவனை வைக்க வேண்டும், நேர காப்பாளர் நியமிக்க வேண்டும், மல்லூர் ஊருக்குள் வரும் பஸ்களின் க ண்டக்டர்கள் அங்குள்ள நோட்டில் கையெழுத்திட வேண்டும் என்றார். அப்போது டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் வேங்கை எம். அய்யனார், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் கலை வாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, மற்றும் தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்கத்தினர் உள்பட ப லர் பங்கேற்றனர்.

    ×