search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்கும் விழா"

    • அப்துல்கலாம் அறக் கட்டளை இணைந்து அரசுப்பள்ளி மாண வர்களுக்கான மதிப்புமிகு மாணவர் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
    • கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவருமான என்.பாரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைவர் மனோகரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேலம்:

    சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ், 7-ம் அறிவு அறக்கட்டளை, அப்துல்கலாம் அறக் கட்டளை இணைந்து அரசுப்பள்ளி மாண வர்களுக்கான மதிப்புமிகு மாணவர் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் மாவட்ட நீதிபதியும், கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவருமான என்.பாரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைவர் மனோகரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தனியார் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் முத்துசாமி, ஓய்வுபெற்ற நல்லாசிரியர் முத்து மாரையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில், சேலம் மத்திய சிறை கண் காணிப்பாளர் வினோத், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 55 அரசுப்பள்ளி மாண வர்களுக்கு மதிப்புமிகு மாணவர் விருதும், 15 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் வழங்கினார்கள்.

    • கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது.
    • கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது. கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். நிர்வாகிகள் நல்லுசாமி, கோபால், சரவணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரி, தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மதுரை பேராசிரியர் சுந்தரத்துக்கு கம்பர் விருதும், பெங்களூரு ராமசாமிக்கு கம்பர் மாமணி விருதும் வழங்கப்படுகிறது.

    என்.பி.எஸ்.சுந்தராஜன், டாக்டர். ராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சார்பில் கல்லாதது கம்பன் அளவு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து ராசிபுரம் பரமேஸ்வரனுக்கு நற்றமிழ் நாயகர் விருதும், கந்தசாமிக்கு சமூக ஆர்வலர் விருதும், இயற்கை விவசாயி கண்ணகிக்கு வேளாண் வித்தகர் விருதும், கிருஷ்ணமூர்த்திக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.

    வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடுவர் ராஜா தலைமையில் இலங்கை வேந்தன் ராவணனின் வீழ்ச்சிக்கு காரணம் முடிவில்லா ஆனவமா, முறையற்ற காமமா என்ற தலைப்பி ல் பட்டி மன்றம் நடக்கிறது.

    அதில் ராஜ பாளையம் ராஜ்கு மார், திருச்சி மாது, மதுரை ரேவதி சுப்புலட்சுமி, சென்னை பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
    • ஊராட்சி செயலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் என். மேலையூர் கிராமத்தில் பழவகை மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமூக சேவகர் வல்லத்தரசு காளிதாசன், தமிழ்செல்வி லெட்சுமணன் ஆகியோர் ஏற்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா சோமன் ஒவ்வொருவருக்கும் கொய்யா, எலுமிச்சை,நெல்லி சீத்தா மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் "ஊர்கூடி ஊரணி காப்போம்" என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வள்ளி துரைராஜ்,கலைஞர் கிராம திட்ட பொறுப்பு அலுவலர் விஜயகுமார், உதவி தோட்டகலை அலுவலர் ஜீவிதா, ஊராட்சி செயலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தெற்குவாசல் நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • 53-வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், தெற்குவாசல் பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிச்செயலர் குணசேகரன் தலைமை தாங்கினார். உறவின்முறை தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் வரவேற்றார்.

    மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் சிறப்பரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கி ள்களை வழங்கினார். 53-வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், தெற்குவாசல் பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நாடார் மேல்நிலை பள்ளி பள்ளிக்குழு கவுரவ தலைவர் ராஜன், உறவின்முறை துணைச்ெசயலாளர் அருஞ்சுனைராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். தலைமை,ஆசிரியர் நாகநாதன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியர்கள் அன்புச்செல்வன், ரமேஷ், வெற்றிவேல், காசி, அலுவலர்கள் மாரிச்செல்வம், பொன்மணி, பாண்டியராஜன், சுரேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை பட்டதாரி தமிழாசிரியை பிரேமலதா தொகுத்து வழங்கினார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    கோபி,ஆக.26-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுச்சூழல் அணி யின் மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தலைமை தாங்கினார் .வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. கே.செல்வன் முன்னிலை வகித்தார்.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ- மாணவி களுக்கு மரக்கன்று களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில்வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், தி.மு.க. சுற்று ச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர்கள் மணிசுந்தர், பழ செல்வக்குமார், நாராயணமூர்த்தி,, உசிலம்பட்டி அருண், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் எல்லப்பாளையம் சிவகுமார், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் , திமுக. சுற்றுச்சூழல் அணி யின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×