search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வல்வில்"

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகின்ற ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.
    • இதையொட்டி டாஸ்மாக் மது கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகின்ற ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விடுமுறை

    இந்த நிலையில் விழா நடைபெறும் நாட்க ளான ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் கொல்லிமலை பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விட மாவட்ட கலெக்டர் உமா மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    இதை தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள செங்கரை, சோளக்காடு, செம்மேடு, காரவள்ளி, அடிவாரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு 1,2,3 தேதிகளில் விடுமுறை அளித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். 

    • நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம், வல்வில் ஓரி சிலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • சேப்பாச்குளம்பட்டி நியாய விலைக் கடையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொல்லிமலை:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம், வல்வில் ஓரி சிலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பாலம்

    கொல்லிமலை வளப்பூர் நாடு பஞ்சாயத்து புத்தக்கல் ஓடையில் நபார்டு ஆர்.ஐ.டி.எப்., திட்டத்தின் கீழ் 254.63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணியினையும், செல்லூர்நாடு பஞ்சாயத்து அரைக்கல்பட்டியில் பழங்குடியினர் பகுதியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கிணறு, நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.

    கொல்லிமலை

    சோளக்காடு சேப்பாங் குளம்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு போதிய மருந்துகள் இருப்பு, டாக்டர்கள் வருகை பதிவேடு, மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    சேப்பாச்குளம்பட்டி நியாய விலைக் கடையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் கணேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபரஜித் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மலா்க் கண்காட்சியை கண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    நாமக்கல்:

    தமிழக அரசின் சாா்பில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டில், கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில், வல்வில் ஓரி விழாவும், சுற்றுலா விழாவும், வாசலூா்பட்டி தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சியும் நேற்று தொடங்கியது.

    மலா்க் கண்காட்சியை, சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, படகு குழாமில் 3 மிதிபடகுகளையும் அவா் இயக்கி வைத்தாா். அதன்பிறகு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற சுற்றுலா விழாவில், பல்வேறு அரசுத் துறைகள் சாா்ந்த 21 அரங்குகளை அவா் திறந்து வைத்தாா்.

    பின்னா் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வடிவேல் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் வல்வில் ஓரியின் உருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், பழங்குடியின மக்களின் சோ்வை ஆட்டம் மற்றும் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கொல்லிமலை தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிா்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இதனையொட்டி, பழைமையை நினைவுகூரும் வகையில் 40 ஆயிரம் வண்ண ரோஜா மலா்களால் மாட்டு வண்டி, 30 ஆயிரம் ரோஜாக்களால் வண்ணத்துப்பூச்சி, 20 ஆயிரம் ரோஜாக்களால் தேனீ மற்றும் பல்வேறு மலா் அலங்காரங்கள் மொத்தம் 75 ஆயிரம் மலா்களால் அமைக்க ப்பட்டுள்ளன.

    மேலும், குழந்தைகள், பெரியவா்களைக் கவரும் வண்ணம் வில், அம்பு, காய்கறிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் வடிவம், காதலா் சின்னம் ஆகியவை அமை க்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் ரோஜா, ஜொ்பரா, காா்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம், சாமந்தி, ஆா்க்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொா்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கி ஆகிய மலா்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த ஆண்டில் முதன்முறையாக, மருத்துவப் பயிா்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில், மருத்துவ பயிரின் தாவரவியல் பெயா், பயன்படும் பகுதி, மருத்துவப் பயன்கள் குறித்து விளக்க குறிப்பு வைத்து காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    விழாவில், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் தேவிகாராணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் கணேசன், சுற்றுலாத் துறை அலுவலா் த.சக்திவேல் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனா். விழாவின் 2-வது நாளான இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொல்லைமலையின் முக்கிய இடங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்த அவர்கள் மலர்க்கண்காட்சியை ரசித்து பார்த்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாளையும், நாளை மறுநாளும் வல்வில் ஓரிவிழா அரசின் சார்பில் நடைபெற உள்ளது.
    • நாமக்கல் மாவட்டத்துக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    கொல்லிமலை:

    தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்து மகிழவும், பிரசித்திப் பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்டவற்றுக்குச் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லவேண்டும். இங்கு பிற மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    கொல்லிமலையில், சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையெழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி, மூலிகைச் செடிகள் கண்காட்சி ஆகியவையும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு விழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான வல்வில் ஓரி விழா நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக நாமக்கல் மாவட்டத்துக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனிடையே வல்வில் ஒரி விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வாசலூர்பட்டி படகு இல்லத்தில் படகு சவாரி மேற்கொள்ள செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்டு, புதியதாக வாங்கப்பட்டுள்ள 3 படகுகளையும், படகுத்துறையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மலர்கண்காட்சி முன்னேற்பாட்டு பணிகளையும், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வல்வில் ஓரிவிழா தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டார்.

    இந்த ஆய்வின்போது சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மற்றும்ம் நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா, நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மாதேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .சீனிவாசன், சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

    ×