search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறுமை ஒழிப்பு திட்டம்"

    ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily #SheilaDikshit
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் என தெரிவித்தார்.



    இந்நிலையில், ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷீலா தீட்சித், வறுமையை அடியோடு ஒழிக்க இந்த திட்டம் மிகப்பெரிய ஆயுதமாக அமையும். ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது. உலகில் எந்த நாட்டு அரசும் நிறைவேற்றாத ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் வழங்கும் மிகப்பெரிய திட்டமாகவும் இது இருக்கும். ராகுலின் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily #SheilaDikshit
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்பு திட்டம் ஏழைகளை வாழ வைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்றினார். 2004 முதல் 2014 வரை நடைபெற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களால் 15 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து வெளியேற்றியதற்காக ஐ.நா. சபையே இந்தியாவிற்கு விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. இதை அத்வானியே பாராட்டியிருக்கிறார்.

    நரேந்திர மோடி அரசு வறுமை ஒழிப்பு முயற்சியில் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. இதிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பொறுப்பை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.

    இந்த திட்டத்தின்படி மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரான 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி மக்கள் பயனடைகிற வகையில் ஆண்டுக்கு ரூபாய் 72 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி தேவை என்றும், முதல் ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி தேவைப்படும் என ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

    நரேந்திர மோடி ஆட்சியில் 15 தொழிலதிபர்களுக்கு வங்கிகள் மூலமாக சலுகை அளிப்பதற்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். நரேந்திர மோடி குறிப்பிட்ட முதலாளிகளுக்காக சலுகை வழங்கியிருக்கிறார்.

    ஆனால் ராகுல்காந்தி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததோடு 25 கோடி மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்து வறுமைக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்.

    வறுமை ஒழிப்பு முயற்சியில் ராகுல்காந்தி வெற்றி பெறுவதற்கு பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு அளித்து ஒத்துழைப்பார்கள்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். #LokSabhaElections2019  #KSAlagiri
    தமிழகத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,031 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொலைத்தொடர்ப்பு கருவிகள் வழங்கப்படும். 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும்.  இயற்கை வேளாண்மையை மேம்படுத்த மாவட்டந்தோறும் மையங்கள் அமைக்கப்படும்.

    பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது. சத்துணவு திட்டத்திற்கான காய்கறி, தாளிதப் பொருட்களுக்கான விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும்.

    சிறப்பு திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறைக்கு ரூ.258.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு 38,000 குடியிருப்புகள் கட்டப்படும்.

    ஒட்டுமொத்தமாக விவசாயத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களின் மறுகட்டமைப்பு தொடர்பான சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவுக்கட்டணம் அதிகபட்சமாக ரூ.3000 என நிர்ணயிக்கப்படும்.

    வரிகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும். வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1,031 கோடி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    மெட்ரோ ரெயில் திட்டத்தை மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளை தூர்வார ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு, நவீன பாசன வேளாண்மைத் திட்டத்திற்கு ரூ.235.05 கோடி நிதி ஒதுக்கீடு, அணைகள் புனரமைப்புக்காக ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ×