search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயலூர் முருகன்"

    வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    திருச்சியை அடுத்த வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சாமி தினமும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு அழைத்து வரப்பட்டார். அதனை அடுத்து தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் திருச்சி, அதவத்தூர், வரகனேரி, அல்லித்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு, நவலூர் குட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தேர் வலம் வந்தபோது, ஆங்காங்கே சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பட்டு செல்லும் வைபவமும் நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை நடராஜர் தரிசனம், விசாக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், பிறகு பால்காவடிகள், அபிஷேகங்கள் நடைபெறும். இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துகுமாரசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறும். 
    திருச்சி அருகே வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது.
    திருச்சி அருகே வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் இரவில் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று அதவத்தூரில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி ரதாரோகணம் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கி நடக்கிறது. இரவில் சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பாடு நடைபெறுகிறது.

    நாளை(சனிக்கிழமை) நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் பால்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இரவில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளிக்கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
    ×