search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனவிலங்குகள்"

    • வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

    உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல் வெளிகள் கருகி விட்டன.

    ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்து விட்டன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

    முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கூடலூர்-கக்கநல்லா சாலை, மசினகுடி-முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.

    இவை உணவு தேடி சாலையோரங்களுக்கு வருகின்றன. குறிப்பாக யானை, மான்கள் கூட்டமாக வலம் வருகின்றன.

    திடீரென சாலையை கடக்கின்றன. இதனால் வேகமாக வரும் வாகனங்களில் வனவிலங்குகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, செல்பி மோகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் விலங்குகளை கண்டவுடன் செல்பி எடுக்கின்றனர். இதனால் அவற்றுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மனிதர்களை தாக்கும் அபாயமும் உள்ளது.

    எனவே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
    • புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்கா–புரம்,சிங்காரா, மாயார், தெப்பக்காடு, கார்குடி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

    இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகம் தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது.இதனால், சாலை–யோரங்களிலேயே வனவிலங்குகள் அதிகளவு வலம் வருகின்றன. குறிப்பக, மசினகுடி - தெப்பக்காடு சாலை, தெப்பக்காடு -கூடலூர் சாலையில் காட்டு யானைகள் அதிகளவு வலம் வருகின்றன.

    அதேபோல், புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஆச்சிரியத்திற்குள்ளாக்கி வருகிறது.

    கடந்த மாதம் பெய்த மழையால் தற்போது மசினகுடி மற்றும் முதுமலை வனங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால், யானைகள், மான்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. குறிப்பாக, மசினகுடி - தெப்பக்காடு சாலையில் அதிகளவு மான் கூட்டங்கள் காணப்படுகிறது. அதேபோல், யானைகளும் அடிக்கடி வலம் வருகின்றன. இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, வாகனங்களில் இருந்தவாறு புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

    • கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது.
    • பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானை, காட்டெருமை, மான், புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிறைவு பெறும் வரை, அதன் உடற்பாகங்களை பாதுகாத்து வருகின்றனர். இதேபோல் இயற்கையான முறையில் வனவிலங்குகள் உயிரிழக்கும் நிலையில், உடற்கூறு ஆய்வுக்கு பின் அதன் உறுப்புகளை வனத்துறையினர் சேகரித்து வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சரவணன், வனச்சரகர்கள் முன்னிலையில் ஓவேலி வனச்சரக பகுதியில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் எலும்புகள், இறைச்சிகள் உள்ளிட்ட பாகங்களை எரிக்கும் பணி கூடலூர் மாக்கமூலாவில் உள்ள வன அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    அதில் பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர். பின்னர் ஆவணங்களின் அடிப்படையில் உடற்பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் கூறும்போது, வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதி பெற்று 500 கிராம் வனவிலங்கு இறைச்சி, 30 கிலோ காட்டெருமை எலும்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது என்றார்.க

    • நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர்.
    • வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கார்த்திக் (வயது24). இவரிடம் வனவிலங்குகள் வேட்டையாட கூடிய நாட்டு வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து நேற்றிரவு கார்த்திக் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த கார்த்திக்கை போலீசார் பிடித்து, வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    அவரிடம் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கார்த்திக் மீது வனத்துறையில் ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது.

    • வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர், காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும் நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் விரட்டிய போது, அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று போலீசாரை பார்த்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோட முயன்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில், இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை அச்சுறுத்தவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும், அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, வேட்டையன், நாராயணன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் புளியம்பட்டி பகுதியிலும் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. மொத்தம் 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதுபோன்ற சட்ட விரோதமாக வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் சம்பந்தமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாகவோ, அல்லது தனது வாட்ஸ்அப் எண் 9655220100 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் காவல் அலுவலகத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×