search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர் தாக்குதல்"

    கீழ்பென்னாத்தூர் அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChildKidnapped
    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் விவசாயி. இவரது 3 வயது மகள் இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது 3 வடமாநில வாலிபர்கள் அங்கு வந்தனர்.

    அதில் ஒருவன் நைசாக குழந்தையை தூக்கினார். 3 பேரும் குழந்தையுடன் நடக்க தொடங்கினர். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருக்கிட்டு கூச்சலிட்டனர். சுதாரித்து கொண்ட வாலிபர்கள் 3 பேரும் தப்பி ஓடினர்.

    பொதுமக்கள் விரட்டி சென்று குழந்தையுடன் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட வாலிபரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அந்த வாலிபரை கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

    இதுபற்றி கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வடமாநில வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் இந்தியில் பேசியதால் அவர் பற்றிய விவரங்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    தமிழகத்தில் குழந்தை கடத்தல் சந்தேகத்தில் வடமாநில வாலிபர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர்.

    போளூர் தம்புகொட்டான் பாறையில் கடந்த மே மாதம் கோவிலுக்கு வந்த சென்னையை சேர்ந்தவர்களை பொதுமக்கள் தாக்கினர். இதில் ருக்குமணி என்பவர் பலியானார். தாக்குதலில் காயமடைநத கஜேந்திரன் என்பவர் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று இறந்தார்.

    இந்த நிலையில் வடமாநில வாலிபர்கள் குழந்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   #ChildKidnapped



    நாமக்கல் டோல்கேட் அருகே வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கண்டெய்னரை ஓட்டி வந்த வட மாநில டிரைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #lorrystrike
    நாமக்கல்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 20-ந்தேதி லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது. இன்றுடன் 6-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 4 அரை லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டு உள்ளது.

    இதைதவிர ஆலைகளுக்கு தேவையான எந்திரங்கள், மோட்டார் உதிரிபாகங்கள், காற்றாலை உற்பத்தி எந்திரங்கள், உள்ளிட்ட இரும்பு தளவாடங்கள் பெரிய, பெரிய கண்டெய்னர்களில் வைத்து டிரெய்லர் மற்றும் லாரிகள் மூலமாக தமிழகத்திற்கு தினமும் வந்து கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கண்டெய்னரில் புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி வந்த வட மாநில டிரைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    அரியானா மாநிலம் பன்வால் ஜில்லா கட்டின் தாலுகா பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாபூ(வயது 40). கண்டெய்னர் லாரி டிரைவர்.

    இவர், அரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து புதிய மோட்டார் சைக்கிள்களை அடிக்கடி தமிழகத்திற்கு பெரிய கண்டெய்னரில் ஏற்றிக் கொண்டு வருவது வழக்கம்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியானாவில் இருந்து புதிய மோட்டார் சைக்கிள்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு தமிழகத்திற்கு வந்தார். நேற்று இரவு நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது கண்டெய்னர் லாரியை திடீரென மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தி டிரைவர் சகாபூவிடம் வாக்கு வாதம் செய்தனர்.

    கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு, இங்கிருந்து ஓடி விடு. இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என அந்த கும்பல் மிரட்டியது. அதற்கு சகாபூ கண்டெயினரில் புதிய மோட்டார் சைக்கிள் இருக்கிறது. இதை விற்பனை நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். இங்கேயே நிறுத்தி விட்டு சென்றால் உரிமையாளர் சத்தம் போடுவார். எனவே கண்டெய்னர் லாரியை ஓட்ட அனுமதிக்குமாறு மர்ம கும்பலிடம் கெஞ்சினார். ஆனால், அந்த கும்பல் நாங்கள் சொன்ன பிறகும் கேட்க மறுக்கிறாயா? என கூறி திடீரென சகாபூ முகத்தில் சரமாரியமாக தாக்கினார்கள். வயிற்றில் கால்களால் எட்டி உதைத்தனர். தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக தாக்கினார்கள்.

    இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சகாபூ அய்யோ, அம்மா, என கதறி அழுதார். தன்னை காப்பாற்றுங்கள்... தன்னை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு அலறினார். சத்தத்தை கேட்டு சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் படபடவென இறங்கி அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    டிரைவர் சகாபூ படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றி சென்ற லாரி டிரைவரும், கிளீனரும் வாளையாறு பகுதியில் வைத்து மர்ம நபர்களால் கற்கள் வீசி தாக்கப்பட்டனர். இதில் கிளீனர் முபாரக் பாட்ஷா பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. #lorrystrike
    ×