search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிக் கொள்ளை"

    • 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை.

    சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று பட்டப் பகலில் இந்த வங்கியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்ற நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 4 குற்றவாளிகள் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இதில், பாலாஜி என்ற நபரை போலீசார் இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேல் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில், சுமார் 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தனிப்படை போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் மீதமுள்ள சுமார் 17 கிலோ தங்கத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×