search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லைசென்சு"

    • ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மாணவர்கள் கல்லூரி சீருடையில் வந்தனர்.
    • ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க போலீ சார் பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் தினமும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், வேப்பமூடு, வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. நேற்று மாலை நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மாணவர்கள் கல்லூரி சீருடையில் வந்தனர்.

    அவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு லைசென்ஸ் இல்லாதது தெரியவந்தது. ஹெல்மெட்டும் அணியாமல் அவர் வந்ததையடுத்து ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் லைசென்சு இல்லாமல் வந்த பலரும் சிக்கினார்கள். 12 பேர் நேற்று ஒரே நாளில் லை சென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.6ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது டன் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆட்டோக்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பிட்ட அளவைவிட அதிக மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கிறார்களா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அதிக குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதிக மாணவ-மாணவி களை ஏற்றி சென்றதாக 40 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் புறநகர் பகுதிகளிலும் போலீசார் ஹெல்மெட் சோதனை நடத்தி வருகிறார்கள். கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வருபவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    ×