search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டரி"

    • ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது.
    • மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில்  பண்ருட்டி ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது. ஊராட்சி மன்றதலைவர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.செயலாளர் சதாசிவம் வரவேற்றார்.மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்.பண்ருட்டி ஜெயம் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் புதுவை அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்துநடத்திய இந்த முகாமில் புதுவை அரவிந்த் கண் மருத்துவ மனை மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சைஅளித்தனர். இதில் எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அதிபர் அருள்,முந்திரி ஏற்றுமதியாளர் பாரதிதாசன் நளபாகம் ராஜா,பூக்கடை பாலமுருகன் காய்கனி சங்கம் சக்திவேல் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    • சிறந்த ஆசிரியர்களுக்கான நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது.
    • ரோட்டரியன் வீரக்குமார், டிரைனர் ரோட்டரியன் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்

    திருவாரூரில் உள்ள ஹோட்டல் செல்விஸ்சில் விஜயபுரம் ரோட்டரி சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர்ஸ் அவார்டை மண்டல துணை ஆளுநர் ரோட்டரியன் சொக்கலிங்கம் கலந்து கொண்டு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விஜயபுரம் ரோட்டரி தலைவர் மற்றும் சாசன தலைவர் ரோட்டரியன் அபி பேரீச்சை சுப்பிரமணியன், செயலாளர் ரோட்டரியன் செந்தில்குமார், பொருளாளர் ரோட்டரியன் வீரக்குமார், டிரைனர் ரோட்டரியன் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்களும், 5 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. மாவட்ட ஆளுநர் முத்து சிறப்புரையாற்றினார்.

    தலைவராக ஜெய கண்ணன், செயலாளராக ராம்குமார், துணைத் தலைவராக ரவி, இணைச் செயலாளராக கார்த்திக், பொருளாளராக ஸ்ரீராம், உடனடி முன்னாள் தலைவராக கண்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். சிறப்பு அழைப்பாளராக லட்சுமி நாராயணன், துணை ஆளுநர் முத்துராமலிங்ககுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்களும், 5 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது.

    மூத்த உறுப்பினர்கள் முத்து, லட்சுமணன், பெரியசாமி, கருமாரி முருகன், வெங்கடாசலம், அழகர்சாமி கிருஷ்ணன், முனிராஜ், சசி கண்ணன், நடராஜன் புதிய உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், ராம்குமார், வினோத் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×