என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில்வே கேட் உடைந்து விழுந்தது"
- திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது
- இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த சாலை வழியாக பஞ்சந்தாங்கி, தபால்புள்ளி, கிணற்றுப்பட்டி, குருந்தம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு விவசாயிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் வடமதுரையிலிருந்து நத்தத்திற்கு செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள ரெயில்வேகேட் ஏற்கனவே 2 முறை உடைந்து விழுந்து ள்ளது. தற்போது மீண்டும் சாலையில் உடைந்துள்ளது. பயணிகள் செல்லாததால் சேதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளோம். மேலும் முறையாக பராமரிக்காத தால் மழை காலத்தில் கேட் உடைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விசயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்