search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே அலுவலகம்"

    • 1-ந் தேதி முதல் கூடுதல் ெரயில்கள் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை- செங்கோட்டை, நெல்லை - செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர் இடையே வருகிற 1-ந் தேதி முதல் முன்பதிவு இல்லாத கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 3.35 மணிக்கு மதுரை வரும்.

    இந்த ரெயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசியில் நின்று செல்லும்.

    நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரெயில், 11.25 மணிக்கு செங்கோட்டை செல்லும். இதே மார்க்கத்தில் நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.20 மணிக்கு நெல்லை செல்லும்.

    இதே மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 12.25 மணிக்கு நெல்லை செல்லும். இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசியில் நின்று செல்லும்.

    திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டையில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    ×