search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நிலையம் முற்றுகை"

    • அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 40க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டனர்.

    கோவை,

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதராவாக ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர்.

    ஆனால் அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க எம்பி பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அவர்கள் பா.ஜ.க எம்.பி. பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரியும், அவர் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர்.

    • சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
    • திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவை-நாகர்கோவில், மற்றும் பாலக்காடு- திருச்சி பயணிகள் ெரயில்கள் நின்று சென்றன.

    கொரோனாவுக்கு பிறகு இந்த ெரயில்கள் எக்ஸ்பிரஸ் ெரயில்களாக மாற்றப்பட்டன. தொடர்ந்து இங்கு ெரயில்கள் நின்று செல்வதில்லை.

    இதனை தொடர்ந்து கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை ெரயில் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்டவர்கள் சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    போராட்டத்தின் போது, நா.கார்த்திக் கூறியதாவது:-சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ெரயில்கள் நின்று செல்வதில்லை. இதன் காரணமாக இங்கிருந்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

    இங்கு ரெயில்கள் நிறுத்த செல்ல வலியுறுத்தி சேலம் கோட்ட ெரயில்வே மேலாளர் தெற்கு ெரயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் கோவையில் இருந்து செல்லும் ெரயில்கள் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து கோவை வரும் ெரயில்கள் சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மனோகரன், சிங்கை பிரபாகரன், பகுதி செயலாளர் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு‌.பழனிச்சாமி, கொங்குநாடு மக்கள் கட்சி தனபால், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளி ட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ×