search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் தடம் புரண்டது"

    • தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பணிமனைக்கு சென்ற ரெயில் தடம் புரண்டது. ரெயில் பெட்டியின் நான்கு சக்கரங்களும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.

    பணிமனைக்கு சென்ற ரெயில் என்பதாலும் பயணிகள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து 2-வது பெட்டியின் 2 சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
    • தடம்புரண்ட ரெயில் பெட்டி பிரிக்கப்பட்டு பாதிக்கப்படாத முன்பகுதி ரெயில் பயணிகளுடன் பங்காருபேட்டை நோக்கி புறப்பட்டு சென்றது.

    பெங்களூரு:

    சென்னை - பெங்களூரு இடையே மாடி ரெயில் (டபுள் டக்கர்) இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று இந்த ரெயில் (வண்டி எண் 22625) நேற்று காலை 7.25 மணி அளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    அந்த ரெயில் காலை 11.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் குப்பத்தை தாண்டி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை அருகே பிசநத்தம் ரெயில் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து 2-வது பெட்டியின் 2 சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதனால் அந்த ரெயில் பெட்டி குலுங்கியது. இதனை சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    இதுபற்றி உடனடியாக பெங்களூருவில் உள்ள மூத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு ரெயிலுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தடம்புரண்ட ரெயில் பெட்டி பிரிக்கப்பட்டு பாதிக்கப்படாத முன்பகுதி ரெயில் பயணிகளுடன் பங்காருபேட்டை நோக்கி புறப்பட்டு சென்றது. தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள், மற்ற பெட்டிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதனைதொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

    இந்த சம்பவத்தின் காரணமாக ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூரு-சென்னை சென்டிரல் மாடி ரெயில் (வண்டிஎண் 22626) மதியம் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டது.

    பெங்களூரு-சென்னை சென்டிரல் பிருந்தாவன் அதிவிரைவு ரெயில் (12640) மதியம் 3.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல வேறு சில ரெயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

    • என்ஜின் மட்டும் வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது
    • பயணிகள் போக்குவரத்து ரெயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது.

    இந்த ரெயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு சென்னை யில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது. பின்பு என்ஜின் மட்டும் அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை என்ஜின் வரவழைக்கப் பட்டு சரக்கு ரெயிலோடு இணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்பு தண்டவாளத்தில் தடம்புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரத்தை வரவழைக்க ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பிரதான லைனில் இல்லாமல் லூப்லைனில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் போக்குவரத்து ரெயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருத்தணி செல்லக்கூடிய புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டது
    • அதிகாரிகள் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலை யம் அருகே உள்ள யார்டு பகுதியில் இருந்து கார்கள் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் 24 காலி பெட்டிகளுடன் ரெயில் நிலைய பகுதிக்கு வந்தது.

    அப்போது திடீ ரென சரக்கு ரெயிலின் கடைசி 2 பெட்டி கள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இதை அறிந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி இது குறித்து அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டி களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் அரக்கோணத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு திருத்தணி செல்லக்கூடிய புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும், சரக்கு ரெயில் தடம் புரண்ட தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


    ×