search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெப்போ வட்டி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ. 1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை.
    • 2024-ம் நிதியாண்டில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவீதம் இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.

    ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும நிதித்துறை வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் உள்ளன.

    பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆண்டின் பிற்பகுதியில் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பணவீக்க எதிர்பார்ப்பு களை உறுதியாக நிலை நிறுத்துவதற்கு நிதி கொள்கை குழு கொள்கை நடவடிக்கைகளை உடனடியாகவும், சரியானதாகவும் தொடர்ந்து எடுக்கும். நிதி கொள்கை குழுவின் நடவடிக்கைகள் விரும்பி முடிவுகளை தருகின்றன.

    வளர்ச்சிக்கு உள்நாட்டு தேவை நிலை ஆதரவாக உள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2024-ம் நிதியாண்டில் 6.5 சதவீத வளர்ச்சியை ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. 2024-ம் நிதியாண்டில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவீதம் இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

    பொருளாதாரத்தில் உற்பத்தி தேவைகளுக்கு போதுமான ஆதாரங்கள் உறுதி செய்யப்படும். மேலும் பணப்புழக்கம் மேலாண்மையில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்படும்.

    விலை மற்றும் நிதி ஸ்திரத் தன்மைக்கு ஏற்படும் அபாயங்களை கையாள்வதில் ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்படும். இந்த ஆண்டு ஜூலை முதல் இந்திய ரூபாய் மதிப்பு நிலையானதாக இருந்து வருகிறது.

    வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது. ரூ.1.80 லட்சம் கோடி வந்துள்ளது. இதில் 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டதாகும்.

    ரூ.500 நோட்டுகளை திரும்ப பெறும் எண்ணம் எதுவும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இதேபோல ரூ. 1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை. யூகங்களை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக தொடருவதாக அறிவித்துள்ளது.
    • உற்பத்தி மற்றும் வினியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும்.

    திருப்பூர் :

    ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக தொடருவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    அமெரிக்க மத்திய வங்கி கடந்த 15 நாட்களில் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் இதை பின்பற்றும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரெப்போ விகிதம் உயர்த்தப்படவில்லை. இதன்மூலமாக வர்த்தக முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியை ஒப்பிடுகையில் பெரும்பாலான மத்திய வங்கிகள் பணவீக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், ரிசர்வ் வங்கி இரண்டுக்கும் இடையே நல்ல சமநிலையை உருவாக்கி வளர்ச்சிக்கு முதன்மை அளிக்கிறது. அதிகரித்து வரும் முதலீடு மேலும் உற்பத்தி மற்றும் வினியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும். அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் குறையும். கடந்த ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 15 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தின் பின்னணியில் பெரிய சாதனையாகும். ரெப்போ விகிதம் அதே நிலையில் தொடர்வது வர்த்தக வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதிக்கொள்கையை வெளியிட்டார்.
    • வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    திருப்பூர் :

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதிக்கொள்கையை வெளியிட்டார்.இதில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 50 அடிப்படை புள்ளி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரெப்போ வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:- ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வங்கி கடனுக்கான வட்டி விகிதமும் உயரும். தொடரும் வட்டி விகித உயர்வு மிகவும் கவலை அளிக்கிறது.திருப்பூர் நிறுவனங்கள் வங்கி கடன் பெற்றே பின்னலாடை ரகங்களை தயாரிக்கின்றன. வட்டி விகிதம் உயர்வு, நிறுவனங்களுக்கு சுமையை மேலும் அதிகரிக்கும்.ஏற்றுமதி நிறுவனங்கள், டாலர் உள்ளிட்ட அன்னிய செலாவணி பணத்தில் கடன் பெற்று ஆடை தயாரித்தால் வட்டி விகித உயர்வு பாதிக்காமல் தவிர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×