search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூபி மனோகரன்"

    • பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள்.
    • பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் பனங்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சில தினங்களுக்கு முன்பு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒரே தீர்வு, பனங்கள் இறக்கவும், அதை விற்பனை செய்யவும் அனுமதிப்பது தான். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போல தமிழகத்திலும் கள் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

    பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் இந்த பனங்கள்.

    இதைக் குடித்தால் சிறிது நேரத்துக்குத்தான் போதை இருக்கும். இந்த பனங்கள் அருந்தும் பழக்கம், நம் தமிழர் வாழ்வில் இணைந்திருந்த ஒன்றுதான். இப்போது டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள், உடலுக்கு தீங்கை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால், பனங்கள் அப்படி கிடையாது. விலை மலிவாகக் கிடைக்கும் அந்த பனங்கள்ளை ஒரு ஏழை தொழிலாளி குடிப்பதால், அவருக்கு உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆரோக்கியமாக இருப்பார். கள்ளுக்கான செலவும் குறைவாகவே இருக்கும்.

    ஒரு பனை தொழிலாளி பனங்கள் இறக்கி விற்பனை செய்யும்போது, அந்த பனை மரங்கள் வைத்துள்ள அனைவருக்கும் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

    பனை மரங்களை வளர்க்கும் ஆர்வமும் பெருகும். அதனால், நம் தமிழ்நாட்டின் மரமான பனை மரத்தின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

    ஆக, பனங்கள் இறக்க வழங்கப்படும் அனுமதியால், கிராமப்புறங்களில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி உண்டாகும். டாஸ்மாக் மதுவைக் குடித்து, உடல் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளுக்குச் செல்லும் குடி நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து விடும். விலை மலிவான பனங்கள் பயன்பாட்டில் இருந்தால், கள்ளச்சாராயம் யாருக்கும் தேவைப்படாது. பனம்பால் என்கிற இந்த பனங்கள் டாஸ்மாக் கடைகளிலேயே விற்பனை செய்ய அரசாங்கமும் முன் வரவேண்டும். இதை நான் சட்டமன்றத்திலும் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன். நமது முதல்வர் அவர்கள், பனங்கள் இறக்க அனுமதி தந்து, அந்த பனங்கள்ளை டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நாங்குநேரி தொகுதியில் மக்கள் பணி செய்வது மனநிறைவை தருகிறது.
    • என் உயிர் பிரியும் வரை காங்கிரசில்தான் இருப்பேன்.

    நெல்லை :

    நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, மாநில நிகழ்வுகளை கவனிக்கவில்லை என பலர் வீண்பழி சுமத்துவார்கள். ஆனால் நேற்றைய (அதாவது நேற்று முன்தினம்) சம்பவம் மூலம் அது துடைத்து எறியப்பட்டுள்ளது. கடைக்கோடி தொண்டனுக்கு காலையில் கிடைத்த தண்டனையை அகில இந்திய காங்கிரஸ் தலைமை மாலையிலேயே தீர்த்து வைத்து மாபெரும் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைமை மூலம் எனது இடைநீக்கத்தை நிறுத்தி வைத்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை வணங்குகிறேன். இதேபோல் அகில இந்திய தலைமைக்கு இந்த பிரச்சினையை உடனடியாக தெரியப்படுத்தி நடவடிக்கை எடுத்த பொதுச்செயலாளர் வேணுகோபாலையும் வணங்குகிறேன்.

    நாங்குநேரி தொகுதியில் மக்கள் பணி செய்வது மனநிறைவை தருகிறது. உயிர் உள்ள வரை மக்களுக்காகவும், கட்சிக்காகவும் பொறுப்புடன் பணி செய்வேன்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைமை எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி, என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன். என் உயிர் பிரியும் வரை காங்கிரசில்தான் இருப்பேன். என் வாழ்க்கை முழுவதையும் காங்கிரசுக்காக அர்ப்பணித்து விட்டேன்.

    காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருப்பதால் தான் உடனடி தீர்வு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை.
    • செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளராகவும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரூபி மனோகரன்.

    கடந்த வாரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக ரூபி மனோகரன் மற்றும் ரஞ்சன் குமார் ஆகியோர் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி உத்தரவிட்டு இருந்தனர்.

    இன்று காலையில் கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இதில் ரஞ்சன் குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். ரூபி மனோகரன் ஆஜராகவில்லை. அவர் 15 நாள் அவகாசம் கேட்டு இருந்தார். இதையடுத்து ரூபி மனோகரனை கட்சி பொருளாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கே.ஆர்.ராமசாமி அறிவித்தார்.

    இது தொடர்பாக ரூபி மனோகரன் கூறியதாவது:-

    நான் 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். நாங்குநேரி தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களையும் சேர்த்துள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    சட்டமன்ற தொகுதியில் எனக்கு பல வேலைகள் உள்ளன. அதனால் தான் இன்று ஆஜராகவில்லை. எனது விளக்கத்தை கேட்ட பின்னர் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் கலந்தாலோசித்தது கிடையாது.
    • கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் கலந்தாலோசித்தது கிடையாது.
    • என்னை ‘பொருளாளர்’ என்கிற பகடைக்காயாக மட்டுமே வைத்துள்ளனர்.

    சென்னை :

    தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கையெழுத்துப் பெறப்பட்ட 62 மாவட்டத் தலைவர்களிடம், அந்தக் கடிதத்தை படித்துப் பார்ப்பதற்குகூட நேரம் கொடுக்காமல், அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது கூட தெரிவிக்காமல், அவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

    நெல்லையில் இருந்து வந்திருந்த கட்சியினரை எப்படி ஓடஓட விரட்டி அடித்தார்களோ, அதே பாணியில் தான் 62 மாவட்டத் தலைவர்களிடமும் வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

    'மாநில பொருளாளர்' என்கிற பெயரை மட்டும்தான் நான் வைத்திருக்கிறேனே தவிர, நான் பொறுப்புக்கு வந்த நாள் முதல் இதுநாள் வரையில், மாநிலத் தலைவர் என்ன செய்தார் என்று, எனக்கு கடுகளவும் தெரியாது. பொருளாளர் பதவியை மட்டுமே எனக்குத் தந்திருக்கிறார்களே தவிர, கட்சியின் கொடுக்கல்-வாங்கல் பற்றி சிறிதளவும் கூட என்னிடம் சொன்னது கிடையாது. கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் எப்போதுமே கலந்தாலோசித்தது கிடையாது. அதிகாரம் எல்லாமே தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தான் இருக்கிறது. எல்லாவற்றையும் அவரே தன்னிச்சையாக செய்து வருகிறார்.

    இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்து இருக்கிறேன். என்னை 'பொருளாளர்' என்கிற பகடைக்காயாக மட்டுமே வைத்துள்ளனர். அந்தப் பதவியை என்னிடம் இருந்து பறித்தால், எனக்கு எதுவும் ஆகப்போவது இல்லை. அந்தப் பதவி இல்லை என்று நான் கவலைப்பட போவதும் இல்லை.

    ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் என்னுடைய தரப்பு நியாயத்தை சொல்வேன். அதன்பிறகு, கட்சித்தலைமை என்ன முடிவு எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×