search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "58 அணி"

    கேரள மீட்பு பணியில் இதுவரை இல்லாத வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 58 அணியினரும் களம் இறங்கி மழை, வெள்ள மீட்பு, நிவாரண பணியில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகின்றனர். #NDRF #KeralaFlood
    புதுடெல்லி:

    தேசிய பேரிடர் மீட்பு படை 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 58 அணிகளை கொண்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த படையினர் கேரளாவில் மழை, வெள்ள மீட்பு, நிவாரண பணியில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகின்றனர்.



    எந்த ஒரு மாநிலத்திலும் எந்தவொரு இயற்கை பேரிடரிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் அத்தனை அணியினரும் களம் இறங்கியது கிடையாது. ஆனால் கேரளாவில் 55 அணிகள் களத்தில் உள்ளன. எஞ்சிய 3 அணிகளும் அங்கு விரைகின்றன. ஒவ்வொரு அணியிலும் சுமார் 40 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.



    கேரளாவில் இந்தப் படையின் மீட்பு பணி பற்றி அதன் செய்தி தொடர்பாளர் நேற்று கூறும்போது, “இதுவரை வெள்ள பாதிப்பில் இருந்து 194 பேர் எங்கள் படையினரால் மீட்கப்பட்டு உள்ளனர். 12 விலங்குகளும் மீட்கப்பட்டன. 10 ஆயிரத்து 467 பேர் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். 159 பேருக்கு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு முந்தைய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன” என்று குறிப்பிட்டார்.

    டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறை, கேரளாவில் நடைபெற்று வருகிற மீட்பு, நிவாரண பணியினை இரவு, பகலாக கண்காணித்து வருகிறது.  #NDRF #KeralaFlood
    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் ஏற்பட்ட தீயை, 58 தீயணைப்பு துறை வீரர்கள் போராடி அணைத்தனர்.

    லண்டன்:

    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு 90க்கும் மேற்பட்ட போல்கால்கள் வந்துள்ளது. இதையடுத்து எட்டு தீயணைப்பு வாகனங்களில் 58 வீரர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.

    அவர்கள் அங்கு செல்வதற்குள் கட்டிடத்தில் இருந்த 40 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டனர். அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 3 பேரை மீட்டனர். அதன்பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

    நல்ல வேளையாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தில் 12-வது மாடியில் இருந்த ஒரு குடியிருப்பின் சில பகுதிகள் மற்றும் 13-வது மாடியின் பால்கனி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    ×