search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2000 ஜெராக்ஸ்"

    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து திமுக தில்லுமுல்லு செய்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இந்த தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் தி.மு.க.வை சேர்ந்த செந்தில்பாலாஜி கார்வழி ஊராட்சியில் 2,000ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து வினியோகித்து விட்டு, பணம் மாலையில் கொடுப்போம் என கூறி தில்லுமுல்லு செய்துள்ளார். அரவக்குறிச்சியில் இதைவிட கேவலமாக வேலை செய்ய எதுவுமில்லை.

    நம்பர் எழுதி ஸ்டார் குறியீடு போட்டு டோக்கன், ரூ.2,000-ன் ஜெராக்ஸ் தாள் ஆகியவற்றை மஞ்சள் துண்டு போட்டிருந்தவர்களே (தி.மு.க.) வினியோகித்தனர். பச்சை துண்டுபோட்டிருந்த (அ.தி.மு.க.) எங்களது ஆட்கள் தான் அவர்களை பிடித்தனர். டோக்கன் கொடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள்.


    ஆர்.கே.நகரில் இது போல் டோக்கன் வினியோகித்து ஒரு ஆளை ஜெயிக்க வைத்தனர். அந்த டோக்கன் எல்லாம் அரவக்குறிச்சியில் எடுபடாது. டோக்கன் விவகாரத்தை விடுத்து வேறு சில கருத்துக்களையும் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். மின்சாரம் திருடியதாகவும், அதற்காக அபராதம் நாங்கள் செலுத்தியதாகவும் கூறியிருக்கிறார். இன்று அதன் விவர நகலை தருகிறேன். விவசாயத்துக்கு போகிற தண்ணீரை ஜெனரேட்டர் பழுதின் காரணமாக தண்ணீரை எடுத்ததற்காக அபராதம் விதித்தனர்.

    மின்சாரம் திருடி பிழைக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பரம்பரையில் நான் பிறக்கவும் இல்லை. இவர்களை மாதிரி திருட்டு சாராயம் காய்ச்சி பாட்டிலில் அடைத்து விற்கவில்லை. மின்சாரம் திருடியதாக இனி குற்றம்சாட்டினால், அது தவறு என்பதற்குரிய ஆதாரத்தை நான் தருகிறேன். டோக்கன் கொடுப்பது உள்ளிட்ட பல வேலைகளை இன்று செய்து விட்டார்கள். இதைவிட கேவலமாக அரசியல் செய்ய முடியாது. ஆள் கடத்தலில் கை தேர்ந்தவர் எதிர்க்கட்சி வேட்பாளர். கருத்து கணிப்பு இருக்கட்டும். நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருப்பு பணமாக பதுக்குவதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். #BlackMoney #RBI #Demonetisation
    புதுடெல்லி:

    2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த நோட்டுகள் கணிசமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.2000 நோட்டுகளை கருப்பு பணமாக பதுக்குவது அதிகரித்து வருகிறது.

    எனவே அதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை அச்சடிப்பதை மிகவும் குறைப்பது என மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதனால் மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த மார்ச் வரையிலான புள்ளி விவரப்படி 18 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் 6.37 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுகளாகும். இது மொத்த பணத்தில் 37 சதவீதம் ஆகும்.

    அதேபோல 500 ரூபாய் நோட்டுகள் ரூ.7.33 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளன. இது மொத்த பணத்தில் 43 சதவீதம் ஆகும்.

    2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். #BlackMoney #RBI #Demonetisation
    ரூ.2000 நோட்டு செல்லாது என திண்டுக்கல்லில் பரவி வரும் வாட்ஸ்அப் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
    குள்ளனம்பட்டி:

    பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

    இதனால் பழைய நோட்டுகளை மாற்று வதற்காக பொதுமக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். அப்போதும் சிலர் 10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நோட்டு செல்லாது என வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பினர்.

    அதன் பின்பு வங்கி அதிகாரிகள் விளக்கமளித்த போதும் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று வரை 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்களும், வியாபாரிகளும் வாங்க மறுத்து வருகின்றனர்.

    தற்போது வாட்ஸ்அப்பில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் புதிய 1000 ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது எனவும் அதன் பின்பு 10 நாட்களுக்குள் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும். இல்லை என்றால் அதன் பின்பு அந்த நோட்டுகள் செல்லாததாகி விடும் என பரபரப்பாக தகவல் பரவி வருகிறது.

    இதை பார்க்கும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவது குறித்து எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. எனவே இது பொய்யான தகவல் ஆகும். இது போன்ற வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் ரூ.2000 நோட்டை தாராளமாக பயன்படுத்தலாம் என்றனர்.

    பணமதிப்பிழப்பு திட்டம் அறிவித்தபோது அவசர அவசரமாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதற்காக ரூ.7965 கோடி செலவிடப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி அப்போது புழக்கக்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    கருப்பு பணம் ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு, தீவிரவாதிகளுக்கு பணம் செல்வதை தவிர்ப்பது போன்ற காரணங்களுக்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

    பணமதிப்பிழப்பு செய்த போது நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் 86 சதவீதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக இருந்தன. அவை திடீரென ஒழிக்கப்பட்டதால் மக்களிடம் பணம் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    ஒழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000 புழக்கத்தில் விடப்பட்டது. ஆனாலும் அந்த பணம் போதுமான அளவுக்கு அச்சடித்து சப்ளை செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பெரும் திண்டாட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக அவசர அவசரமாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்து அனுப்பும் பணியை செய்தது. அப்போது இந்த நோட்டுகளை அச்சடிப்பதற்காக மட்டுமே ரூ.7965 கோடி செலவிட்டதாக இப்போது தெரியவந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கு ரூ.3421 கோடி செலவிட்டிருந்தனர். பண மதிப்பிழப்பால் அச்சடிப்பு கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.


    நாடு முழுவதும் பண தட்டுப்பாடு இருந்ததால் அச்சடிக்கப்பட்ட பணத்தை உடனடியாக நாட்டின் அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல வேண்டியது இருந்தது. இதற்காக இந்திய விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினார்கள். சி-17, சி-137ஜே ஹெர்குலஸ் ஆகிய விமானங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் எடுத்து செல்லப்பட்டன.

    இவ்வாறு 86 முறை விமானங்கள் ரூபாய் நோட்டுக்களை ஏற்றிச் சென்றன. இதற்காக தனியாக ரிசர்வ் வங்கி ரூ.29 கோடியே 41 லட்சம் கட்டணமாக இந்திய விமானப்படைக்கு செலுத்தியது.

    முன்னாள் ராணுவ கமாண்டர் லோகேஷ்பத்ரா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதுபற்றிய தகவல்களை கேட்டிருந்தார். அவருக்கு இந்த விவரங்கள் பதிலாக கொடுக்கப்பட்டுள்ளது.

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் பெரிய அளவில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதுவும் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

    10 லட்சம் 500 ரூபாய் நோட்டில் 7.1 நோட்டுகள் மட்டுமே கள்ள நோட்டு இருந்ததாகவும், 10 லட்சம் 1000 ரூபாய் நோட்டில் 19.1 நோட்டுகள் மட்டுமே கள்ள நோட்டாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் தனது லாபத்தில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசுக்கு பங்கு தொகையாக வழங்கும். ஆனால் புதிய ரூபாய் நோட்டு அச்சடிப்பு மற்றும் அவற்றை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றை இந்த பங்கு தொகையில் கழித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
    ×