search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி X"

    ரியல்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை ரியல்மி X சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி X சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், ஏ.ஐ. வசதி, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. சோனி IMX471 பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி X ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி X சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்



    ரியல்மி X ஸ்மார்ட்போன் ஸ்டீம் வைட் மற்றும் பன்க் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 219 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,325) என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 232 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,345) என்றும் டாப்-எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 261 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18,395) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மாஸ்டர் எடிஷன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் போன்ற நிறங்களில் பிரத்யேக பேட்டன்களுடன் கிடைக்கிறது. இதன் விலை 276 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19,410) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    ரியல்மி X லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
    - 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி X லைட் ஸ்மார்ட்போன் நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 174 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,260) என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 189 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,290) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 218 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,334) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் மிகமுக்கிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Realme



    ரியல்மி பிராண்டு தனது புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை டீசர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் ரியல்மி X ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX586 48 எம்.பி. சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் 91.6 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என ரியல்மி டீசரில் வெளிப்படுத்தியது. தற்சமயம் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.



    ரியல்மி X ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்குவது மட்டுமின்றி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மே 15 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் தெரிகிறது. ரியல்மி X ஸ்மார்ட்போனுடன் ரியல்மி X லைட் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ரியல்மி X லைட் ஸ்மார்ட்போன் ரியல்மி 3 ப்ரோ மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட மாடலாகவும் இருக்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி X ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, கிரேடியண்ட் பேக் பேனல் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதேபோன்று ரியல்மி X லைட் ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு பை சார்ந்த கலர் ஓ.எஸ். 6.0, 48 எம்.பி. மற்றும் 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஐபோன் X ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneX



    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 7 உற்பத்தி நடைபெறுகிறது. இதே ஆலையில், ஏற்கனவே ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்தால் விற்பனை அதிகரிக்கும் என ஆப்பிள் நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபோன் X உற்பத்தி ஜூலை 2019 இல் துவங்கலாம் என தெரிகிறது.

    இந்தியாவில் ஐபோன் X மாடலை தாய்வான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடலை உற்பத்தி செய்ய சென்னை அருகே அமைந்திருக்கும் ஆலையில் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.



    முதற்கட்டமாக ஐபோன் X உற்பத்தி துவங்கியதும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்திய பொது தேர்தலுக்கு பின் உருவாகும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பொருத்தே இவை எந்தளவு சாத்தியப்படும் என்பதை பார்க்க வேண்டும். 

    இதுவரை விஸ்ட்ரண் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 29 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்ததாக இந்திய டெல்லுலார் மற்றும் மின்னணு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம்  5.8 கோடி யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது.
    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், பொது இடங்களில் ஐபோன் X பயன்படுத்திய பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. #Samsung



    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் சாம்சங், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆப்பிள் மீது வழக்கு தொடர்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்றும் கூறலாம்.

    சாம்சங் மற்றும் ஆப்பிள் இடையே சட்டப்பூர்வமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில், சாம்சங் புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. வழக்கமாக ஆப்பிள் மீது வழக்கு பதிவு செய்யும் சாம்சங், இம்முறை ஆப்பிள் ஐபோன் X பயன்படுத்திய பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

    ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரபலங்களை விளம்பர தூதர்களாக நியமிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் சாம்சங் நியமித்த பெண் விளம்பர தூதர் மீது தான் சாம்சங் வழக்கு பதிவு செய்துள்ளது. ரஷ்யாவில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் செனியா சொப்சாக் சாம்சங் நிறுவன விளம்பர தூதராக இருக்கிறார். 

    சாம்சங் நிறுவனத்துடன் இவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் சொப்சாக் பொது இடங்களில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சொப்சாக் சாம்சங் நிறுவனத்துக்கு 16 லட்சம் டாலர்கள் வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது.


    புகைப்படம் நன்றி: CEN

    சாம்சங் நிறுவன விளம்பர தூதராக இருக்கும் நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐபோன் X பயன்படுத்தியது, மேலும் சில பொது நிகழ்ச்சிகளில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் நிறுவனம் சார்பில் சொப்சாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    எனினும், தனது விளம்பர தூதர் பல்வேறு சமயங்களில் பொது வெளியில் ஐபோன் X பயன்படுத்தியதால் சாம்சங் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

    சமூக வலைதளம் மற்றும் பொது வெளியில் தங்களது சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரான்டு நிறுவனங்கள் சார்பில் பிரபலங்களை விளம்பர தூதர்களாக நியமிக்கும் வழக்கம் பொதுவான ஒன்று தான். சில விளம்பர தூதர்கள் தங்களது ஒப்பந்தத்தின் படி பொது வெளியில் போட்டி நிறுவன சாதனங்களை பயன்படுத்த மாட்டோம் என குறிப்பிட்டு இருப்பர்.

    அந்த வகையில் விளம்பர தூதராக இவ்வாறு செய்து சிக்கிக் கொண்ட முதல் நபராக சிப்சொக் இருக்கலாம். எனினும் ஐபோன் X பயன்படுத்தினால் ரூ.11 கோடி வரை செலவிட நேரிடும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஒப்போ ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. #OPPOFindX
     


    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பாப்-அப் கேமரா மாட்யூல் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகமான ஃபைன்ட் X மாடலில் 93.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்கப்பட்டு இருந்தது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டது. அறிமுக நிகழ்வின் போதே ஃபைன்ட் X மாடலில் 10 ஜி.பி. ரேம் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படும் என ஒப்போ அறிவித்து இருந்தது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் வெர்ஷன் TENAA வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.

    வெய்போவில் லீக் ஆகியிருக்கும் விவரங்களில் ஃபைன்ட் X மாடலில் 10 ஜி.பி. ரேம் வேரியன்ட் உருவாக்கப்படுவது உறுதியானது. இத்தகைய ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையையும் ஃபைன்ட் X பெற இருக்கிறது. எனினும் இந்த வேரியன்ட் அறிமுகமாகும் வரை மற்ற நிறுவனம் 10 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யாமல் இருக்க வேண்டும்.



    சில மாதங்களுக்கு முன் வெளியான விவரங்களில் விவோ நிறுவனம் X சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் அந்நிறுவனம் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. மேம்படுத்தப்பட்ட ஃபைன்ட் X மாடலின் அறிமுகம் குறித்து ஒப்போ இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

    ரேம் தவிர புதிய வேரியன்ட்டில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது. ஃபைன்ட் X ஸ்மார்ட்போனில் 6.42 இன்ச் AMOLED , 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன், 19:5:9 ரக டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று ஃபைன்ட் X மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இதன் மெமரி முந்தைய வேரியன்ட் போன்று 256 ஜி.பி. வரை வழங்கப்படலாம்.

    பாப்-அப் கேமரா மாட்யூலின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா: 16 எம்.பி. + 20 எம்.பி. யூனிட் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி, 3730 எம்.ஏ.ஹெச். பேட்டரி, கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து, ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன்களின் விலையை குறைத்துள்ளது. #iPhoneX



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்து, நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க விரும்புவோர் ஆவலுடன் எதிர்பார்த்த தகவலை ஆப்பிள் அறிவித்தது. மூன்று புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்ததுடன் ஆப்பிள் ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன் X உள்ளிட்ட மால்களின் விலையை குறைப்பதாக அறிவித்தது.

    சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஐபோன் 6எஸ் 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.29,900 முதல் துவங்குகிறது. ஐபோன் 6எஸ் பிளஸ் மாடல் ரூ.34,900 முதல் துவங்குகிறது. ஐபோன் மாடல்களின் புதிய விலை ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் X உள்ளிட்ட மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் எஸ்.இ. விற்பனை மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

    புதிய விலையை பொருத்த வரை ஐபோன் X மாடலின் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.91,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,06,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐபோன் X விலை ரூ.95,390 என்றும் ரூ.1,08,930 விலையில் விற்பனை செய்யப்பட்டது.



    இத்துடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 64 ஜிபி ஐபோன் 8 மாடல் ரூ.59,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் ரூ.74,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல்கள் ரூ.67,940 மற்றும் ரூ.81,500 விலையில் விற்பனை செய்யப்பட்டன.

    ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.69,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல் ரூ.77,560 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 256 ஜிபி வேரியன்ட் ரூ.91,110 விலையில் இருந்து ரூ.6,210 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.84,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன் 2016-ம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 32 ஜிபி ஐபோன் 7 விலை ரூ.39,900 என்றும், 128 ஜிபி மாடல் ரூ.49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடல்கள் முன்னதாக ரூ.52,370 மற்றும் ரூ.61,560 விலையில் விற்பனை செய்யப்பட்டன. 

    இதேபோன்று ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி வேரியன்ட் ரூ.49,900 மற்றும் 128 ஜிபி ரூ.59,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
    ஆப்டிமஸ் நிறுவனம் இந்தியாவில் பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #BlackberryEvolveX


    ஆப்டிமஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 

    பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக, 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் DTEK ஆப் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 

    அழகிய செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், டூயல் 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் X ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில், எவால்வ் X ஸ்மார்ட்போனில் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சாஃப்ட் டச் பேக் பேனல், கிரேடு 7 அலுமினியம் ஃபிரேம், கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - எவால்வ் - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - எவால்வ் X – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - எவால்வ் - 4 ஜிபி ரேம்
    - எவால்வ் X - 6 ஜிபி ரேம்
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - எவால்வ் - 13 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்,சாம்சங் S5K3L8 சென்சார்
    - எவால்வ் X – 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, சாம்சங் S5K2L8 சென்சார்
    - 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3 சென்சார், f/2.6
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங் 

    பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,990 மற்றும் ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. பிளாக்பெரி எவால்வ் X ஆகஸ்டு மாத இறுதியிலும், எவால்வ் செப்டம்பர் மாதத்திலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.3,950 கேஷ்பேக் மற்றும் மாத தவணை முறைகளில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #BlackberryEvolveX #Smartphone
    ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு OLED பேனல்களை இந்த சீன நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #iPhoneX



    ஆப்பிள் நிறுவன ஐபோன் X மாடலுக்கு சாம்சங் நிறுவனம் OLED பேனல்களை வழங்கி வருகிறது. OLED பேனல்களுக்கு சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நம்பியிருக்கும் நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் OLED பேனல்களை சீன நிறுவனத்திடம் இருந்து வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி திறனை மேம்படுத்துவதன் விளைவாக சீன நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED பேனல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் BOE தொழில்நுட்ப குழுமம் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களுக்கு OLED பேனல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே சீனாவின் BOE நிறுவனம் ஆப்பிள் நிறுவன ஐபேட் மற்றும் மேக்புக் சாதனங்களுக்கு பெரிய LCD ஸ்கிரீன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்துக்கான விநியோகத்தை பெய்ஜிங் நகர அரசு மூலம் கட்டுப்படுத்தப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்துக்கு உபகரணம் வழங்கும் ஒற்றை சீன நிறுவனமாக இருக்கிறது.


    கோப்பு படம்

    புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பிள் நிறுவனம் மற்றும் சீன அரசாங்கத்திடையேயான உறவு மேம்படும் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளே-ஸ்கிரீன் உற்பத்தியில் BOE நிறுவனத்தை பொருத்த வரை தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடனான போட்டியில் சீனாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறது. 

    இதேபோன்று சீன நிறுவனம் மட்டுமின்றி எல்ஜி நிறுவனமும் சுமார் 20 முதல் 40 லட்சம் OLED பேனல்களை ஆப்பிள் 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் மாடலுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதேபோன்று சாம்சங் நிறுவனமும் ஐபோன்களுக்கு OLED பேனல்களை விநியோகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

    வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

    ஆப்பிள் எதிர்பார்க்கும் அதிக தரமுள்ள உபகரணங்களை வழங்கக் கூடிய பட்சத்தில் BOE நிறுவனத்திடம் இருந்து டிஸ்ப்ளே ஸ்கிரீன்களை ஆப்பிள் நிறுவனம் வாங்குவது ஆப்பிள் நிறுவனம் மற்றும் சீனாவுடன் நட்புறவை மேம்படுத்த வழி செய்யும். சீனாவின் BOE நிறுவனம் பீஜிங் நகர அரசு சார்ந்தது என்பதோடு அதன் பெரிய பங்குதாரர்களாக மாநிலம் இணைந்த நிறுவனங்கள் இருக்கின்றன. #Apple #iPhoneX

    புகைப்படம் நன்றி: PIXABAY
    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டெல்லியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OPPOFindX



    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனில் 6.42 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED பானரோமிக் ஆர்க் ஸ்கிரீன், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓஎஸ் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஏஐ போர்டிரெயிட்கள், ஏஐ ஸ்கிரீன் ரெக்ஃனீஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 800 சீன்களை கண்டறியும், இதன் ஸ்லைடிங் அம்சம் சுமார் 3,00,000 முறைக்கும் மேல் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.



    இதன் 3D ஃபேஸ் அன்லாக் வசதி ஓ-ஃபேஸ் ரெக்ஃனீஷன் (O-Face Recognition) என அழைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 15,000 முக நுனுக்கங்களை ஸ்கேன் செய்து இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. இது வழக்கமான கைரேகை தொழில்நுட்பத்தை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்கிறது. இதன் 25 எம்பி செல்ஃபி கேமரா இயற்கையாக செல்ஃபிக்களை அழகாக்குகிறது. 

    இத்துடன் 3D லைட்டிங் தொழில்நுட்பம் போர்டிரெயிட்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இத்துடன் ஆப்பிள் அனிமோஜி போன்று 3D ஓமோஜி தொழில்நுட்பம் முக பாவனங்களை பதிவு செய்யும்.






    ஒப்போ ஃபைன்ட் X சிறப்பம்சங்கள்:

    - 6.42 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 256 ஜிபி இன்டெர்னல் மெமகி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் f/2.0, OIS
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3,730 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் விலை ரூ.59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 3-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஜூலை முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 மதிப்பிலான சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    சாம்சங் நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் மூன்று டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று டிஸ்ப்ளேக்களை கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமையை சாம்சங் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, லெட்ஸ் கோ டிஜிட்டல் (LetsGoDigital) வெளியிட்டிருக்கும் தகவல்களில் நான்கு வெவ்வேறு வடிவமைப்புகளுக்கான காப்புரிமையை சாம்சங் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வடிவமைப்புகளும் முற்றிலும் வெவ்வேறாக இருக்கும் என்றாலும், இவற்றில் முன்பக்கம், பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் டிஸ்ப்ளே இருக்கும் என வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வடிவமைப்புகளை வைத்து பார்க்கும் போது மூன்று வடிமைப்புகளில் மெல்லிய பெசல்கள் பக்கவாட்டுகளில் இருக்கும் என்றும், இவற்றில் ஆன்டெனா பொருத்தப்படலாம் என்றும் நான்காவது வடிவமைப்பில் சாதனம் முழுக்க டிஸ்ப்ளே பரவியிருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே என்ன செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இது சிறிய மற்றும் வளையும் தன்மை கொண்ட ஆப்டிக்கல் டிரான்ஸ்பேரன்ட் லேயர் கொண்டிருக்கும் என்றும் இதனை சாதனத்தின் பக்கவாட்டில் வழங்க முடியும் என கூறப்படுகிறது.



    முன்பக்கம் மற்றும் பின்புறம் வழங்கப்படும் டிஸ்ப்ளேக்களை தனியே பயன்படுத்த முடியும் என கூறப்படும் நிலையில், பனர்கள் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும். ஒருபுறம் இன்டர்நெட் மற்றொரு புறம் கேமிங் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த சாதனம் எதிர்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை அதிகளவு தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 1,00,000 யூனிட்களையும், அடுத்த ஆண்டு வாக்கில் பத்து லட்சம் யூனிட்களை தயாரிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

    ஏற்கனவே டி.ஜி. கோ வெளியிட்ட தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிலேயே வெளியிடலாம் என தெரிவித்திருந்தார். 

    புகைப்படம்: நன்றி LetsGoDigital
    ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் X விளம்பர வீடியோ மீது சந்தேகம் கொண்ட ப்ரிட்டன் விளம்பர ஆணையம், தகுந்த ஆய்வுக்கு பின் ஆப்பிளிடம் சரண்டர் ஆகியிருக்கிறது.
     


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றாலே அதன் கேமரா அம்சங்கள், இதர நிறுவன ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்டு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கேமரா சார்ந்த விஷயத்தில் ஆப்பிள் அதிக அக்கறை செலுத்தி வரும் நிலையில், அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் X மாடலிலும் தலைசிறந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.

    சமீபத்தில் தனது ஐபோன் X மாடலுக்கான விளம்பர வீடியோவினை ஆப்பிள் வெளியிட்டிருந்தது. இதில் ஐபோன் X கொண்டு ஸ்டூடியோ தர போர்டிரெயிட் புகைப்படங்களை படமாக்க முடியும் என ஆப்பிள் குறிப்பிட்டிருந்தது. வீடியோவை பார்த்து அதிர்ந்து போன விளம்பர தர நிர்ணய ஆணையம் ஆப்பிள் ஐபோன் X மாடலின் ஸ்டூடியோ தர போர்டிரெயிட் அம்சத்தை எங்களால் நம்ப முடியாது என பகிரங்கமாக தெரிவித்தது.

    ப்ரிட்டனை சேர்ந்த விளம்பர தர நிர்ணய ஆணையம் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்ததை போன்று ஆப்பிள் வெளியிட்டிருக்கும் விளம்பரம் திசைத்திருப்பும் வகையில் இருப்பதாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாக புதிய தகவல் பதிவிடப்பட்டு இருக்கிறது. 



    அதில் ஐபோன் X மாடலின் விளம்பரங்களில் ஆப்பிள் நிறுவனம் ஸ்டூடியோ தர போர்டிரெயிட்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என விளம்பர தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி, ஐபோன் X மாடலில் உள்ள 50மில்லிமீட்டர் ஃபோக்கல் லென்ஸ் பிரபல ஸ்டூடியோ போர்டிரெயிட் லென்ஸ் ஆக இருக்கிறது, இத்துடன் லைட்டிங் ஆப்ஷன்களும் ஸ்டூடியோவில் உள்ளதை போன்று வேலை செய்கிறது.

    விளம்பர தர நிர்ணய ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்களில், “ஸ்டூடியோ தர புகைப்படங்களை எடுக்கத் தேவையான பல்வேறு எஃபெக்ட்கள், நுட்பங்கள் மற்றும் டூல்கள் இருப்பதை உணர்ந்தோம், எனினும் இவை ஐபோன் X மட்டும் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படவில்லை. எனினும், அதிக தரமுள்ள புகைப்படங்களை எடுக்கத் தேவையான லைட்டிங் எஃபெக்ட்கள் இருப்பதை அறிந்து கொண்டோம். மேலும் இவை அனைத்தும் ஐபோன் X கேமரா மூலம் எடுக்கப்பட்டது என்பதையும் புரிந்து கொண்டோம்,” என தெரிவித்திருக்கிறது.

    ஆப்பிள் வெளியிட்ட விளம்பர வீடியோவை கீழே காணலாம்..,

    ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை 'ஓவர்டேக்' செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு இருக்கிறது.




    ஸ்மார்ட்போன்களில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்ப்பதில் விவோ தனது வழக்கமாக்கி வருகிறது.

    விவோ சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், பாப்-அப் கேமரா போன்ற அம்சங்களை வழங்கியுள்ளது. 

    ஷாங்காய் நகரில் துவங்கியிருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஃபேஸ் ஐடி போன்று வேலை செய்யும் புதிய அம்சம் ஐபோன் X-ஐ விட சிறப்பாகவும், மிக துல்லியமாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



    விவோ அறிமுகம் செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்தில் உள்ள 3D டெப்த் சென்சிங் சிஸ்டம் 3,00,000 சென்சார் பாயின்ட்களை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவில் உள்ள டைம் ஆஃப் ஃப்ளைட்' (Tof) அம்சத்தை பயன்படுத்தி இந்த அம்சம் வேலை செய்கிறது. 

    தி வெர்ஜ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விவோவின் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் இருந்து முகம் 3 மீட்டர் தொலைவில் இருந்தாலும் சீராக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் ஆஃப் ஃப்ளைட் 3D சென்சிங் தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைத்து, எதிர்காலத்தில் புதிய அம்சங்களை கண்டறிவதாக விவோ தெரிவித்துள்ளது.

    எதிர்கால ஸ்மார்ட்போன்களில் ஜெஸ்ட்யூர் மற்றும் மோஷன் ரெகஃனீஷன்களில் புதிய சென்சார் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் கான்செப்ட் கிடையாது என்றும் இதனை அதிகளவு தயாரிக்க தயார் நிலையில் இருப்பதாக விவோ தெரிவித்துள்ளது.
    ×