search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு"

    • ஆகஸ்ட் 3 ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    • ராணுவத்தில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர்வதற்கான வயது, கல்வித் தகுதி மற்றும் பிற அளவுகோல்கள் பற்றிய விவரங்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    திருப்பூர் :

    அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு பணி அவினாசியில் செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கி உள்ளது .ஆகஸ்ட் 3 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர் அவிநாசி அருகே உள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 20ந் தேதி முதல் அக்டோபர் 1ந் தேதி வரை ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கோயம்புத்தூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அக்னிவீர் கிளார்க்-ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ராணுவத்தில் சேர்வதற்காக இந்த ஆள்சேர்ப்பு பணி நடத்தப்படுகிறது. ராணுவத்தில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர்வதற்கான வயது, கல்வித் தகுதி மற்றும் பிற அளவுகோல்கள் பற்றிய விவரங்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அதிலேயே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் பதிவு கட்டாயம் என்றும் மற்றும் 14 ஆகஸ்டுக்கு பிறகு ஆன்லைனில் அட்மிட் கார்டு வழங்கப்படும். இந்த ஆள்சேர்ப்பு பணியை கோவையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் நடத்துகிறது என்று கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×