search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷிய பெண்"

    பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய பெண் மீண்டும் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது 35), அவரது தம்பி பாரதி (31), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ரஷிய பெண் கோர்ட்டில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இதனையடுத்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீலகண்டன், பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதி தேவநாதன் விசாரணை நடத்தினார்.

    மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக ரஷிய பெண் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #ElenaAlekseevnaKhusyaynova #RussianWoman
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் ரஷியா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக்குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலும் ரஷிய தலையீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா (வயது 44) என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க அரசியல் அமைப்பில் குழப்பம் விளைவிக்கும் ஒரு திட்டத்துக்கான தலைமை கணக்காளராக இந்தப் பெண் பணியாற்றி வருகிறார்.2016-ம் ஆண்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த எந்த வியூகத்தையும், தொழில் நுட்பத்தையும் ரஷியா பயன்படுத்தியதோ, அதையே இப்போதும் பயன்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க அரசின் கொள்கையிலும், வாக்காளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷியா, சீனா, ஈரான், மற்றும் சில நாடுகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை கூறுகிறது.ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடமும், அமெரிக்க கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் பிற நாடுகள் செயல்படுவது கவலை அளிக்கிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். #ElenaAlekseevnaKhusyaynova #RussianWoman 
    ×