search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷிய இளம்பெண் கற்பழிப்பு"

    ரஷிய இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் முதலில் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலை கஸ்தூரி நகரில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் தங்கியிருந்த ரஷியாவை சேர்ந்த இளம்பெண் அலினா. கடந்த 16-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுய நினைவின்றி கிடந்தார்.

    உடனடியாக அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நடந்த சம்பவம் குறித்து ரஷிய பெண் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அபார்ட்மெண்ட் உரிமையாளர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன் (வயது 35), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    ரஷிய பெண் சுற்றுலாவுக்காக கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். முதலில் அவர் செந்தில்குமார் என்பவர் நடத்தி வந்த விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அதிக வாடகை வசூலித்ததால், பாரதியின் அபார்ட்மெண்டுக்கு கடந்த 12-ந் தேதி சென்றார்.

    வெளிநாட்டினர் விடுதிகளிலோ, வீடுகளிலோ தங்கினால் வெளிநாட்டினர் பதிவு அதிகாரிக்கு ‘பார்ம்-சி’ என்ற படிவத்தை வழங்க வேண்டும் என்பது சட்ட விதிமுறையாகும்.

    ரஷிய பெண் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து அவர் தங்கி இருந்த 2 இடங்களில் இருந்தும் ‘சி’ படிவம் வழங்கப்பட்டு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் ரஷிய பெண் முதலில் தங்கி இருந்த விடுதியின் உரிமையாளர் திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமாரும், 2-வதாக தங்கி இருந்த அபார்ட்மெண்டின் உரிமையாளர் பாரதியும் ‘சி’ படிவம் கொடுக்காதது தெரிய வந்தது. இதுகுறித்து செந்தில்குமார் மற்றும் பாரதி மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாரதி ரஷிய பெண் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். மற்றொருவரான செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் பூரண குணமடைந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலையில் அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் ஆரணி கோர்ட்டில் ஆஜராகி மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமியிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

    சட்ட ரீதியான விசாரணைக்காக சில நாட்கள் ரஷிய பெண் இங்கு தங்க வேண்டிய நிலை உள்ளதால் அவர் மாவட்ட நிர்வாகம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார், நீதிபதி முன்னிலையில் குற்றவாளிகள் அடையாள அணி வகுப்பு நடத்தவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.



    திருவண்ணாமலையில் கற்பழிக்கப்பட்ட ரஷிய இளம்பெண் பாம்பு கடி போதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை விசிறி சாமியார் ஆசிரமம் அருகே உள்ள அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்த ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் அலினா (22) கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து, சுய நினைவை இழந்துகிடந்த ரஷியப்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அபார்ட்மெண்ட்டுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன், ரஷிய நாட்டு தூதரக விசா சரிபார்ப்பு அதிகாரி டென்னிஸ், எஸ்.பி. பொன்னி ஆகியோர் சிகிச்சை பெறும் ரஷியப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஆரணி மாஜிஸ்திரேட் மகாலட்சுமி, ஆஸ்பத்திரியில் அலினாவிடம் 2 மணி நேரம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார். வீடியோவாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ரஷியப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் அபார்ட்மெண்ட் நிர்வாகி பாரதி (31) மற்றும் அவரது அண்ணன் நீலகண்டன் (35), இவர்களுடைய நண்பர்கள் மணிகண்டன் (37) மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் (30) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து, எஸ்.பி. பொன்னி கூறியதாவது:-

    ரஷிய இளம்பெண் அலினா ஜூன் 3-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார். வதோரா, ராஜ்பூர், மும்பை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு மும்பையில் இருந்து சென்னை வந்தார்.

    அங்கிருந்து கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். முதலில் அவர் தங்கிய விடுதி அறைக்கு வாடகை அதிகம் வசூலித்தனர். அதன் பிறகு தான், கற்பழிக்கு குற்றவாளியான பாரதியின் அபார்ட்மெண்ட்டிற்கு கடந்த 12-ந் தேதி சென்றார். 16-ந் தேதி காலை மயக்க நிலையில் கிடந்த அலினா மீட்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். சுயநினைவு திரும்பிய அலினா, விடுதியில் தங்கிய 3 நாளில் அபார்ட்மெண்ட் நிர்வாகி பாரதி 2 முறை மிரட்டி கற்பழித்துள்ளார்.

    நிர்வாண நிலையில் இருந்தபோது 2 முறை குளியல் அறைக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டியதாகவும், அப்போது நீலகண்டன் மற்றும் மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய 3 பேரும் மானபங்கம் செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் ஐ.பி.சி. 376, 354 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷிய பெண், சொந்த நாடு திரும்புவதற்குள், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

    குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுதரப்படும். வெளிநாட்டினர் தங்கும் விபரங்களை தெரிவிக்காத, ஒரு லாட்ஜ் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    இந்த நிலையில், ரஷிய இளம்பெண் அலினாவின் செல்போனை ஆராய்ந்த போது, லெஸ்பியன் படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் போதை பொருட்களும் அவர் தங்கியிருந்த அறையில் கண்டெடுக்கப்பட்டது.

    ரஷியப்பெண் சுயநினைவு இல்லாமல் கிடந்ததற்கு அவர் உச்சக்கட்ட போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் எதுபோன்ற போதைப்பொருள் பயன்படுத்தினார் என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

    அதே நேரத்தில், அவர் பாம்பு கடி (ஸ்நேக் பைட்) போதையில் இருந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பாட்டிலில் ஒரு குட்டி பாம்பு போடப்பட்டிருக்கும். அந்த பாட்டிலின் மேல் பகுதியை நாக்கின் மீதுவைத்து மூடியை திறந்தால், பாம்பு தலையை நீட்டி நாக்கில் கொத்தும்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விட, பாம்பு கடி ராஜ போதையை உண்டாக்கும். இந்த போதை தலைக்கேறியதும் கிறுகிறுத்து போவார்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு போதையில் சுருண்டு கிடப்பார்கள்.

    பாம்பு கடி போதை வெளிநாடுகளில் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, ரஷிய இளம்பெண்ணும் பாம்பு கடி போதையில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் ரஷிய பெண் பலாத்கார வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரஷிய பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
    திருவண்ணாமலை:

    ரஷிய நாட்டை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண் கடந்த 12-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்து செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான அபார்ட்மெண்டில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 14-ந் தேதி விடுதி அறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை. 16-ந் தேதி காலை சந்தேகம் அடைந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அந்த அறையின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். பின்னர் அன்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ரஷிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ரஷிய பெண் தங்கி இருந்த அபார்ட்மெண்டை திருவண்ணாமலை அருகில் உள்ள வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி (வயது 31) என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து அனுமதியில்லாமல் விடுதி நடத்தி வந்துள்ளார். அதே அபார்ட்மெண்டில் 5-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் பாரதியிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரஷிய பெண் பலாத்கார சம்பவத்தில் போலீசாருக்கு பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன் (35), அவர்களின் கார் டிரைவர் வெங்கடேசன் (30) மற்றும் பாரதியின் நண்பர் மணிகண்டன் (37) ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் போலீசார் ரஷிய பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர் சுயநினைவின்றியும், அதிர்ச்சியிலும் இருந்ததால் எந்தவித தகவலையும் பெற முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

    கடந்த 17-ந் தேதி மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட அந்த ரஷிய பெண்ணை பார்வையிட்டனர். ரஷிய நாட்டை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து சென்றனர். ரஷிய நாட்டு தூதரக விசா சரிபார்ப்பு அதிகாரி டென்னிஸ் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு நேரில் வந்து அந்த பெண்ணை பார்வையிட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சுயநினைவுக்கு திரும்பிய ரஷிய பெண்ணிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வாக்குமூலத்தை கைப்பட எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

    மேலும் நேற்று மாலை ரஷிய பெண்ணிடம் ஆரணி கிளை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு நடந்த சம்பவம் குறித்து ரகசிய வாக்குமூலம் பெற மருத்துவமனைக்கு 5.10 மணிக்கு வந்தார். அவர் சுமார் 2½ மணி நேரத்திற்கு மேல் அந்த பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.

    இதையடுத்து இரவு 8 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரஷிய இளம்பெண் சுற்றுலாவுக்காக கடந்த 3.6.2018 அன்று இந்தியாவுக்கு வந்துள்ளார். பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். முதலில் அவர் தங்கிருந்த அறைக்கு அதிக வாடகை வசூலித்ததால், மாற்று இடம் தேடியுள்ளார்.

    இதையடுத்து அவர் விசாரித்து பாரதியின் அபார்ட்மெண்டிற்கு கடந்த 12-ந் தேதி சென்றார். பின்னர் கடந்த 16-ந் தேதி காலை 7.50 மணியளவில் மயக்க நிலையில் இருந்து அந்த பெண்ணை பாரதி மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பாரதி - வெங்கடேசன்

    இதுகுறித்து நான் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற அபார்ட்மெண்டை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினோம். மேலும் சந்தேகத்தின் பேரில் நீலகண்டன், அவரது தம்பி பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தோம். இந்த நிலையில் ரஷிய பெண் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தில் பாரதி என்பவர் தன்னை 2 முறை பலாத்காரம் செய்ததாகவும், மற்ற 3 பேர் தன்னை மானபங்கம் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவண்ணாமலையில் கற்பழிக்கப்பட்ட ரஷிய இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். #Russiantouristgirl

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலைக்கு கடந்த 12-ந் தேதி சுற்றுலா வந்த ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் அலினா (வயது 22), செங்கம் சாலை கஸ்தூரிநகரில் உள்ள அபார்ட்மெண்ட்டில் அறை எடுத்து தங்கினார்.

    கோவில், ஆசிரமங்களை சுற்றி பார்த்து லாட்ஜில் தங்கி இருந்த ரஷிய இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.

    பலத்தகாயங்களுடன் அலங்கோலமான நிலையில், மீட்கப்பட்ட ரஷிய பெண் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

    இச்சம்பவம் குகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் அபார்ட்மெண்ட் நிர்வாகிகள், கார் டிரைவர், ஊழியர்கள் உள்பட 15 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தின் குடியுரிமை ஆவண (விசா) ஆய்வு பிரிவு அதிகாரி டென்னிசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ரஷிய இளம்பெண்ணை நேரில் சந்தித்தார்.

    முகத்தில் வைக்கப்பட்டிருந்த பிராண வாயு மாஸ் எடுக்கப்பட்டு விட்டது. இயல்பாக சுவாசிக்கிறார். பால் மற்றும் ஜூஸ் போன்ற திரவ உணவுகளை உட்கொள்கிறார்.

    அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ரஷிய தூதரக அதிகாரியிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். எஸ்.பி. பொன்னி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    சுயநினைவு திரும்பிய ரஷிய இளம்பெண்ணிடம் தூதரக அதிகாரி சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பலாத்காரம் குறித்து எஸ்.பி. பொன்னி வாக்கு மூலம் பெற்றார்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். பலாத்காரம் செய்தவர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

    உணவு மற்றும் குளிர் பானத்தில் மயக்க மருந்து மற்றும் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பலாத்காரம் செய்ததாக ரஷிய இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ரஷிய இளம்பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பலாத்காரம் நடந்த தனியார் அபார்ட்மெண்ட்டுக்கு தாசில்தார் மனோகரன் அதிரடியாக ‘சீல்’ வைத்தார்.

    விசாரணை வளையத்தில் உள்ள 15 பேரிடமும் போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து எஸ்.பி. பொன்னி கூறியதாவது:-

    இந்த வி‌ஷயத்தில் பெண் பாதிக்கப்பட்டுள்ளார். திருட்டு போன்ற மற்ற வழக்கில் உடனடியாக தகவல் தெரிவிப்பது, நடவடிக்கை எடுப்பது போன்று இதில் செய்ய முடியாது.

    இந்த வழக்கு தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றார். #Russiantouristgirl

    திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ரஷிய பெண்ணிற்கு நடந்த சம்பவம் தமிழக மக்கள் வெட்கப்படவேண்டிய வி‌ஷம் என்று மாவட்ட நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் நேற்று மாலை மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணை பார்த்தனர்.

    மேலும் அவர்கள் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

    இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஷிய இளம்பெண் இன்னும் சுயநினைவின்றி காணப்படுகிறார். அவருக்கு ரஷிய மொழியை தவிர வேறு மொழி பேச தெரியவில்லை. ரஷிய மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் அந்த பெண்ணிடம் பேசி விசாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ரஷிய பெண்ணிற்கு நடந்த இந்த சம்பவம் தமிழக மக்கள் வெட்கப்படவேண்டிய வி‌ஷயமாகும். வெளிநாட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து தங்கி உள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு வலுப்படுத்த மாவட்ட காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவண்ணாமலை லாட்ஜில் பிறந்தநாள் கொண்டாடத்தில் ரஷிய பெண் கற்பழிக்கப்பட்டாரா என்பது தொடர்பாக கைதான 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் அபார்ட்மென்ட் உள்ளது.

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் 5 சிறிய வீடுகள் போன்ற வடிமைப்பில் இந்த அபார்ட்மென்ட் அமைந்திருக்கிறது.

    இந்த அபார்ட்மென்டில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 12-ந் தேதி அறை எடுத்து தங்கினார். தியான பயிற்சி தொடர்பான ஆய்வு செய்ய ஆன்மிக சுற்றுலா பயணியாக வந்திருப்பதாகவும், 10 நாட்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அபார்ட்மென்ட் நிர்வாகிகள் நீலகண்டன், அவரது தம்பி பாரதி ஆகியோர், நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் ரஷிய பெண்ணை செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அறையில் மயங்கிக் கிடந்தவரை காப்பாற்றி அழைத்து வந்ததாக டாக்டர்களிடம் 2 பேரும் தெரிவித்தனர்.

    ரஷிய பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவரது மார்பகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் காயமும், நகக் கீறல்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது. எனவே, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார், அந்த பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மலேசியாவில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான இந்த அபார்ட்மென்ட்டை லீசுக்கு எடுத்து நடத்தியதும், அனுமதியின்றி லாட்ஜாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    மேலும், ரஷிய பெண் மயக்கமடைந்தது குறித்து அபார்ட்மென்ட் நிர்வாகிகள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர் விசாரணையில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ரஷிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    எனவே, அபார்ட்மென்ட் நிர்வாகிகள் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடனந்தத்தைச் சேர்ந்த நீலகண்டன்(36) அவரது தம்பி பாரதி(30), இவர்களுடைய நண்பர்களான செங்கம் சாலையை சேர்ந்த மணிகண்டன்(37), பாலாஜி நகரைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் உத்தண்டி மகன் வெங்கட்(29), சிவா(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நேற்று காலை முதல் இரவு வரை தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் சரக டிஐஜி வனிதா, திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி ஆகியோர் நேற்று மாலை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து, கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் சுமார் 1 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து டி.ஐ.ஜி. வனிதா கூறியதாவது:-

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. விசாரணை முடிந்ததும் கைது உள்ளிட்ட மற்ற தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

    ஓட்டல் நடத்தி வரும் மணிகண்டனுடைய பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 14-ந் தேதி இரவு அபார்ட்மென்டில் மதுபான பார்ட்டி நடத்தியதும், அப்போது தனியாக தங்கியிருந்த ரஷிய இளம்பெண்ணுக்கு லெமன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    குளிர் பானத்தில் கலந்துகொடுத்த மயக்க மருத்தின் அளவு அதிகமானதால், நேற்று முன்தினம் வரை மயக்கம் தெளியாமல் இருந்துள்ளது. எனவே, அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். அப்போதும் மயக்கம் தெளியவில்லை.

    உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்தவர்கள், அறையில் மயங்கி கிடந்ததாக நாடகமாடி, தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 பேரில் யார், யார் பாலியல் கொடுமையில் ஈடுபட்டது, அதற்கு உதவியவர்கள் யார் என்பது தெரியவில்லை. எனவே, கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ரஷிய பெண்ணுக்கு, நேற்று இரவு மயக்கம் தெளிந்தது.

    அவரிடம் ரஷ்ய மொழியும், ஆங்கிலமும் தெரிந்த, திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 2 பேரை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்மிக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த கொடுமையான சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலையில் விடுதிக்குள் புகுந்து ரஷிய இளம்பெண்ணை தாக்கி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    ரஷிய நாட்டை சேர்ந்த திருமணமாகாத 21 வயது இளம்பெண், இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக, கடந்த 12-ம் தேதி மும்பை வந்தார். அங்கு இருந்து திருவண்ணாமலைக்கு வந்தார். கிரிவலப் பாதையில் யோகிராம் சுரத் குமார் ஆசிரமத்தின் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    அருணாசலேஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமத்தை சுற்றி பார்த்தார். கடந்த 14-ந்தேதி (சனிக்கிழமை) விடுதி அறைக்குள் சென்ற ரஷிய இளம்பெண் நேற்று வரை வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    லாட்ஜ் உரிமையாளர் விரைந்து வந்து அறையை திறந்து பார்த்தார். அப்போது, ரஷிய இளம்பெண் உடலில் பலத்த காயங்களுடன் ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமான நிலையில் சுய நினைவின்றி கிடந்தார். அதிர்ச்சியடைந்த லாட்ஜ் நிர்வாகிகள், அவரை மீட்டு அத்தியந்தலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து, விடுதி உரிமையாளர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார், தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ரஷிய இளம்பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவ பரிசோதனையில், ரஷிய இளம்பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ரஷிய இளம்பெண் தங்கி இருந்த லாட்ஜ் அறையில் இருந்து அதிக அளவிலான வெளிநாட்டு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

    ரஷிய இளம்பெண்ணுக்கு கார் டிரைவராக, திருவண்ணாமலை பாவாஜி நகரை சேர்ந்தவர் இருந்துள்ளார். ரஷிய இளம்பெண்ணை சுற்றுலா தலங்களுக்கு அவர் தான் அழைத்து சென்று வந்துள்ளார். அந்த டிரைவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    சனிக்கிழமையன்று கார் டிரைவர் தனது நண்பர்கள் 3 பேருடன் லாட்ஜிக்கு வந்து சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி, உயரதிகாரிகள் மூலம் ரஷிய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். ரஷிய தூதரக அதிகாரிகளும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதனிடையே, பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டதாக லாட்ஜ் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    ×