search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் போர் விமான ஊழல்"

    ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியின்போது பதில் அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

    ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் எந்த அடிப்படையில் இதை குறிப்பிடுகிறது? என எங்களை பார்த்து பாஜகவினர் கேட்கிறார்கள்.

    இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்னர் பேசிய  நிதி மந்திரி அருண் ஜெட்லி ரபேல் பேரம் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்திருந்தார். 36 விமானங்களின் விலையான 58 ஆயிரம் கோடியை 36-ல் வகுத்துப் பார்த்தால் வரும் தொகைதான் 1600 கோடி ரூபாய்.

    526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன? உயர்த்தியவர்கள் யார்?

    இதில் உண்மை நிலவரம் என்னவென்றால் ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார்.



    என்மீது தனிப்பட்ட வகையில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது என பிரதமர் ஒரு பேட்டியில் கூறுவதை நேற்று பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார்? என்று எனக்கு புரியவில்லை.

    ரபேல் பேரம் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பிரதமரை மிரட்டி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக மோடியுடன் நேருக்குநேராக விவாதிக்க நான் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன். ஆனால், என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை.

    ரபேல் பேரத்தில் ஊழலே நடக்கவில்லை. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #AnilAmbani #Chowkidaarchorhai #Modi #RahulGandhi #RafaleDeal
    பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவன பணியாளர்களை இன்று சந்தித்த ராகுல் காந்தி ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக கலந்துரையாடினார். #Rafalescam #RahulGandhi #HALemployees
    பெங்களூரு:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு  1 லட்சத்து 30 ஆயிரம் கோடி லாபம் கிடைக்க பிரதமர் மோடி உதவி செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு குறிப்பு ஒன்றையும் தனது பதிவில் ராகுல் காந்தி இணைத்திருந்தார். இந்த ஆதாரத்தில் உண்மை இருப்பதாகவும், இதையும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் மறுக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்திய அரசுக்கு சொந்தமான ‘ஹெச்.ஏ.எல்.’ எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிட்டட் நிறுவனத்திடம் ரபேல் போர் விமானங்களை பராமரிக்கவும், பழுது பார்க்கவும் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் இந்த ஒப்பந்தம் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.



    இதன்மூலம், உள்நாட்டு விமான தயாரிப்பு துறையில் நற்பெயருடன் திகழும் ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்தையும், அதன் பணியாளர்களின் திறமையையும் பா.ஜ.க. களங்கப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூருவில் உள்ள ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்துக்கு வருகை தந்தார்.

    அங்கு பணியாற்றிய முன்னாள், இந்நாள் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, ‘ஹெச்.ஏ.எல்.’ என்பது ஒரு நிறுவனம் மட்டுமல்ல என்று குறிப்பிட்டார்.

    இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபோது பல்வேறு துறைகளில் தடம் பதிப்பதற்காக சில சிறப்புக்குரிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவ்வகையில், உள்நாட்டில் விமான உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட ‘ஹெச்.ஏ.எல்.’ மாபெரும் சொத்தாகும்.

    இந்த நிறுவனத்தின் மூலமாக நீங்கள் எல்லாம் நாட்டுக்கு ஆற்றிய பணிக்காக இந்த நாடு உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார். #Rafalescam #RahulGandhi #HALemployees
    ×