search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த வங்கி ஊழியர்"

    கர்ப்பிணியாக இருந்த போது எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். #HIVBlood #PregnantWoman

    விருதுநகர்:

    விருது நகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சென்னையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் 3-வதாக சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    மேச்சேரி அருகே உள்ள குதிரைகாரன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது பெண் காதல் திருமணம் செய்தவர். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, பரிசோதனை செய்ய மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்தார்.

    அப்போது, அவருக்கு ரத்தம் குறைவாக உள்ளதாக கூறி, டாக்டர்கள் ரத்தம் ஏற்றி உள்ளனர். சில நாட்களிலேயே அவருக்கு தலை சுற்றல், உடல் அரிப்பு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது.

    இது குறித்து அவர் டாக்டர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் புது ரத்தம் ஏற்றினால் அதுபோல பாதிப்புகள் வருவது சகஜம் என கூறி உள்ளனர். பின்னர் அவருக்கு குழந்தை பிறந்தது.

    2015-ம் ஆண்டு மீண்டும் அவர் கர்ப்படைந்தார். இதையடுத்து அவர் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள் அவருடைய கணவரை அழைத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். ஆனால், அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் இதற்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களே பொறுப்பு. இது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம் என கூறினர்.

    அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், இதனை வெளியில் கூறினால் உங்களுக்குத் தான் அவமானம். உங்களை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள் என மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் மாதந்தோறும் அரசு வழங்கும் ரூ.1000 உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே 2-வது குழந்தையும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் பிறந்தது. அதன் பிறகு மாதந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது அக்கம், பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தை ஓதுக்கி வைத்தனர். அவர்களது குழந்தைகளுடன் பக்கத்து வீட்டு குழந்தைகள் கூட விளையாட மறுத்தனர்.

    தற்போது குடும்பத்துடன் தனது விவசாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் கணவன் -மனைவி இருவரும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியப்போக்குடன் எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் கொடுத்த நபரை கண்டறிந்து, அவர் வேறு எங்கும் ரத்தம் கொடுக்காத வகையில் தடுக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறும்போது, “தவறு செய்த அதிகாரிகள் மீதும், ரத்தம் கொடுத்தவர் மீதும் உரிய நடவடிக்கை வேண்டும்” என்றார்.

    இந்த சம்பவம் பற்றி சேலம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர். பூங்கொடி கூறும் போது, “மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து யார்-யாருக்கெல்லாம் ரத்தம் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார். #HIVBlood #PregnantWoman

    அறுவை சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாக வக்கீல் அறிவித்துள்ளார். #HIVBlood

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த மாணவி ரத்தம் உறையாமை நோயால் அவதிப்பட்டார். அவருக்கு மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

    அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மதுரை புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது மாணவிக்கு மூக்கில் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

    அதைத்தொடர்ந்து ஆபரே‌ஷன் நடந்தது. ஆபரே‌ஷனுக்கு பின்னர் ரத்தம் செலுத்தப்பட்டது. ஒருசில நாட்களுக்கு பின்னர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாணவிக்கு ஆபரே‌ஷன் நடந்த ஆஸ்பத்திரியில் கேட்ட போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.

    எனவே ஆஸ்பத்திரி மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    தற்போது மாணவிக்கு ரத்தம் கொடுத்த ரத்த வங்கி செயல்பாட்டில் இல்லை. மாணவி தற்போது மதுரையில் உள்ள கல்லூரியில் நடனம் தொடர்பாக பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    உடல் நலக்குறைவு காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #HIVBlood

    சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் ரத்தம் அளித்த இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 23 வயது மனைவி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். அவருக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதுகுறித்து பரிசோதனை நடத்தியபோது கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பிறகுதான் இந்த தொற்று பரவி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தியபோது சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரத்தம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரிடம் தானமாக பெறப்பட்டது என தெரிய வந்தது.

    இதுகுறித்து சுகாதாரத் துறையினரும், அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவ குழுவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரத்தில் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி, ஆலோசகர்கள் கணேஷ்குமார், ரமேஷ் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

    ரத்ததானம் செய்த வாலிபர் 2016-ம் ஆண்டு முதல் ரத்ததானம் செய்து வந்த நிலையில் எச்.ஐ.வி. தொற்றுபற்றி அவருக்கு யாரும் தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினருக்கு ரத்தம் தேவைப்பட்டதால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அவர் ரத்தம் கொடுத்துள்ளார்.

    அதன் பின்னர் வெளிநாடு செல்ல திட்டமிட்ட வாலிபர் அதற்காக மேலூரில் ரத்த பரிசோதனை செய்தபோது தான் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது பற்றி தெரியவந்தது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனை சென்ற வாலிபர் தான் வழங்கிய ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால் உறவினருக்கு அந்த ரத்தம் செலுத்தப்படவில்லை என கூறிய ரத்த வங்கி ஊழியர்கள் அதனை சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கி இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ரத்த தானம் வழங்கிய வாலிபர் கடந்த 26-ந்தேதி கமுதியில் மனவேதனையில் எலி மருந்து (வி‌ஷம்) குடித்து மயங்கினார். அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கும் மனஉளைச்சலில் இருந்த அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தார். தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ கருவிகளை பிடுங்கி எறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இன்று அதிகாலை திடீரென ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற் கொண்டனர். ஆனால் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் சண்முகசுந்தரம் கூறுகையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குற்ற உணர்வில் இருந்ததால் அதற்காக மனநல சிகிச்சையும் அளித்தோம். இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு வாலிபர் திடீரென ரத்தவாந்தி எடுத்தார்.

    அவருக்கு டாக்டர்கள் உடனடி சிகிச்சை அளித்தனர். ஒரு யூனிட் ரத்தமும், 3 யூனிட் ரத்த பிளாஸ்மாவும் ஏற்றப்பட்டது. ஆனால் அவரது உடல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காலை 8.10 மணிக்கு அவர் பரிதாபமாக இறந்தார்' என்றார்.

    வாலிபர் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியது. தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை தானாக முன்வந்து தெரிவித்த நிலையிலும் பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டதால் அவர் மனவேதனையில் இருந்ததாகவும் அதுவே அவரை கொன்றுவிட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். #HIVBlood #PregnantWoman
    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் சிகிச்சைக்கு 3 டாக்டர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. #HIV #HIVBlood #Pregnantwoman

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி இந்த மாத தொடக்கத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று இருந்தார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த குறைபாட்டை நீக்குவதற்கு உடலில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கர்ப்பிணி பெண்ணிடம் தெரிவித்தனர். அந்த பெண்ணின் ரத்த வகை ‘ஓ பாசிடிவ்” ஆகும். சிவகாசி அரசு மருத்துவ மனையில் இருந்து அந்த ரத்தம் பெறப்பட்டது. கடந்த 3-ந்தேதி இந்த ரத்தத்தை அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றினார்கள்.

    மறுநாள் அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி-வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அந்த பெண்ணை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

    8 மாத கர்ப்பமாக இருந்ததால் அந்த பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரத்தத்தில் எச்.ஐ.வி. கலந்து இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த பெண்ணின் ரத்தத்தில் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு தான் இந்த பிரச்சினை வந்து இருப்பது உறுதியானது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் கமுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரால் தானம் செய்யப்பட்டதாகும். அவர் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி இந்த ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனையில் தானம் செய்து உள்ளார்.

    2016-ம் ஆண்டு முதல் இவர் ரத்த தானம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையில் அவரது ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் எடுத்து சேமித்து வைத்து உள்ளனர். அதை சிவகாசி ஆஸ்பத்திரிக்கு கொடுத்துள்ளனர். அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்தது.

     


    சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் அந்த ரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்கவில்லை. பரிசோதனை செய்யாமலேயே நம்பிக்கையின் அடிப்படையில் அந்த ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தி விட்டனர்.

    இந்த தகவல்கள் அம்பலமானதும் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை கலந்த ரத்தத்தை பெற்ற கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று காலை முதல் அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண் நேற்று மதியம் புகார் அளிக்க குடும்பத்துடன் சாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்துள்ளது.

    டாக்டர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அப்பாவி ஏழை பெண்ணுக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது தமிழ்நாடு முழுவதும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.

    அந்த பெண்ணுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நவீன சிகிச்சை கிடைக்கும் வகையில் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

    ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் உள்ள தனி வார்டில் அந்த பெண்ணுக்கு இன்று காலை முதல் நவீன சிகிச்சைகள் தொடங்கி உள்ளன. அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைககு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.

    24 மணி நேரமும் அந்த கர்ப்பிணி பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் சுழற்சி முறையில் அந்த பெண்ணை பரிசோதித்து வருகிறார்கள்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    சாத்தூர் அரசு மருத்துவ மனையில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிப்புக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனை முதல் மாடியில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகப்பேறு மருத்துவத் துறை தலைவர் டாக்டர் சாந்தி மற்றும் டாக்டர்கள் நடராஜன், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் மருத்துவக்குழு நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று தாக்கம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.

    அந்த பெண்ணுக்கு ஏற்கனவே சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் சிகிச்சை தரப்பட்டது. இருந்த போதிலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று காலை எச்.ஐ.வி. தொற்று உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்து அதன் அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சர்வதேச தரத்துடன கூடிய “எய்ட்ஸ் வைரஸ் லோடு” என்ற அதிநவீன சாதனம் பயன்பாட்டில் உள்ளது. அதன் வாயிலாக கர்ப்பிணி பெண்ணின் உடலில் நோய் தொற்றின் தாக்கத்தை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

    தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ள கர்ப்பிணி பெண் நலமாக உள்ளார். இருந்தபோதிலும் மஞ்சள்காமாலை நோய் தொற்றுக்கான கிருமி பாதிப்பு உள்ளது. அவற்றுக்கான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #HIV #HIVBlood #Pregnantwoman

    எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #HIV #HIVBlood #Pregnantwoman

    விருதுநகர்:

    சாத்தூரில் 8 மாத கர்ப்பிணி பெண் உடல்நலக் குறைவுக்காக பெற்ற ரத்த தானம் அவருக்கு எமனாக மாறி இருக்கும் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் கிருமிகளான எச்.ஐ.வி. கிருமிகள் கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதால் தற்போது அந்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி உள்ளது. மனதை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். 24 வயதாகும் அந்த பெண் குழந்தை பேறுக்காக சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் அந்த பெண் மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று இருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த குறைப்பாட்டை நீக்குவதற்கு உடலில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கர்ப்பிணி பெண்ணிடம் தெரிவித்தனர்.

    அந்த பெண்ணின் ரத்த வகை ‘ஓ பாசிடிவ்” ஆகும். அந்த ரத்தத்தை தானம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. பல்வேறு இடங்களிலும் கேட்கப்பட்ட பிறகு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ‘ஓ பாசிடிவ்’ ரத்தம் கையிருப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த ரத்தம் பெறப்பட்டது. கடந்த 3-ந்தேதி இந்த ரத்தத்தை அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றினார்கள். பிறகு அந்த பெண் வீடு திரும்பினார்.

    மறுநாள் அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி-வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அந்த பெண்ணை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

    8 மாத கர்ப்பமாக இருந்ததால் அந்த பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்போது அந்த பெண்ணுக்கு ரத்தத்தில் எச்.ஐ.வி. கலந்து இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த பெண்ணின் ரத்தத்தில் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கர்ப்பம் உண்டானது முதல் கடந்த நவம்பர் மாதம் இறுதி வரை அந்த பெண் நல்ல சுகாதாரமாக இருந்தார். மாதந்தோறும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டு இருந்தது.

    ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி டாக்டர்கள் ரத்தம் ஏற்றிய பிறகுதான் அந்த பெண்ணுக்கு பிரச்சினை வந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரால் தானம் செய்யப்பட்டதாகும். அவர் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி இந்த ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனையில் தானம் செய்து உள்ளார்.

    2016-ம் ஆண்டு முதல் இவர் ரத்த தானம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையில் அவரது ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் எடுத்து சேமித்து வைத்து உள்ளனர்.

    முதலில் அந்த ரத்தம் ரமேசின் அண்ணி ஒருவருக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அண்ணிக்கு அந்த ரத்தம் ஒத்துவராததால் இருப்பு வைத்து விட்டனர். அந்த சமயத்தில்தான் சாத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ‘ஓ பாசிடிவ்’ ரத்தம் தேவை என்ற தகவல் வந்து இருக்கிறது.

    உடனே சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் அந்த ரத்தத்தை எடுத்து சாத்தூருக்கு அனுப்பி விட்டனர். சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் அந்த ரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்கவில்லை.

    பரிசோதனை செய்யாமலேயே நம்பிக்கையின் அடிப்படையில் அந்த ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தி விட்டனர். ஆனால் அது உயிருக்கே உலை வைக்கும் எமன் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

    உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகே கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்த ரத்தம் ஏற்றப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பொதுவாக ஒருவரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டதும் 5 விதமான சோதனை செய்வார்கள். அவ்வாறு 5 விதமான பரிசோதனைகள் செய்து இருந்தால் அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்து இருக்கலாம்.

    ஆனால் ரத்தத்தை முறைப்படி பரிசோதிக்காததால் அப்பாவி பெண் இன்று உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். சாத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களின் அலட்சிய போக்கும் இந்த விபரீதம் ஏற்பட காரணமாகி இருப்பது தற்போது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    ரத்த தானம் செய்த ரமேஷ் சமீபத்தில் வெளி நாடு செல்வதற்காக விண்ணப்பித்து இருந்தார். அதற்காக அவர் ரத்த பரிசோதனை செய்து சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது இருந்தது. அவர் ரத்த பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை அறிந்ததும் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.உடனே அவருக்கு ஏற்கனவே நவம்பர் மாதம் 30-ந்தேதி ரத்த தானம் செய்து இருந்ததுதான் நினைவுக்கு வந்தது. அந்த ரத்தத்தை யாருக்காவது செலுத்தி விட்டால் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு விடுமோ என்று கவலை அடைந்தார்.

    உடனடியாக அவர் சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு சென்று தான் தானமாக கொடுத்த ரத்தத்தை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று மனிதாபி மானத்துடன் கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

    கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டதற்கு சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களும், சாத்தூர் மருத்துவமனை ஊழியர்களும் தான் காரணம். 2 இடங்களிலுமே தானமாக பெறப்பட்ட ரத்தம் பரிசோதிக்கப்படவில்லை.

    இது தெரிய வந்ததும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார் அளித்தார். அதன்பேரில் மருத்துவ துறை உயர் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அதன்பேரில் முதல் கட்டமாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ரத்த வங்கியின் ஆலோசகர், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    பொதுவாக ரத்த தானம் செய்யப்பட்டதும் அந்த ரத்தம் நல்ல ரத்தம்தான் என்று டாக்டர் ஒருவர் சான்றிதழ் அளிப்பார். ரமேஷ் தானம் செய்த ரத்தத்திற்கும் அவ்வாறு ரத்த வங்கியின் டாக்டர் சான்றிதழ் அளித்து உள்ளார்.

    அந்த ரத்தத்திற்கு எவ்வாறு சான்றிதழ் அளிக்கப்பட்டது என்று டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. அவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே எச்.ஐ. வி.யுடன் மஞ்சள் காமாலை கலந்த ரத்தத்தை பெற்ற கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது. சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அந்த பெண்ணை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இருந்தனர். அங்கு அவருக்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த பெண் சாத்தூரில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை தாம்பரம் சாணடோரியத்தில் உள்ள சிறப்பு மருத்துவ மனையில் இருந்து மருந்து- மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே அந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தனி மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் தீவிர சிகிச்சை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார் சாந்தி ஆகியோர் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் டெல்லியில் இருப்பதால் நாங்கள் வந்தோம். அவர் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள் உரிய நிவாரணம் பெற்று கொடுக்கப்படும் என்றனர்.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண் இன்று புகார் அளிக்க குடும்பத்துடன் சாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.

    எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை வழங்கிய சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மூலம் குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை, நோய் தொற்று தொடர்பான எந்த முறையான பயிற்சியும் அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இத்தகைய தவறுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க ரத்த சேமிப்புகளை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 89 ரத்த வங்கிகள் மற்றும் 357 ரத்த இருப்பு மையங்களிலும் மறு பரிசோதனையை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ரத்த மாதிரிகள் முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நோயாளிகளுக்கு செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை ரத்த வங்கிகளில் இருந்து ரத்தத்தை மருத்துவமனைகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. #HIV #HIVBlood #Pregnantwoman

    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #HIV #HIVBlood
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்டார். குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.



    இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ரத்த வங்கி ஊழியர் வளர்மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  #HIV #HIVBlood
    ×