search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரணில் விக்கிரமசிங்கே"

    நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழலை கருதியும், என்னை கொல்ல நடந்த சதியை நினைத்தும், ராஜபக்சேவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு மாற்றுவழி எனக்கு தோன்றவில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #Srilanka #MaithripalaSirisena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்தார். 

    இதற்கிடையே, சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று மைத்ரிபால சிறிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கேவின் சிறப்பு உரிமைகள் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கியது ஏன் என்பது குறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

    விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்த பின்னர் நாட்டு மக்களிடையே முதல்முறையாக உரையாற்றிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, ‘சாமான்ய மக்களின் எண்ணங்களை பற்றி கவலைப்படாமல் தனக்கு வேண்டியவர்கள், தன்னை சுற்றி இருப்பவர்கள் மட்டும் லாபம் அடையும் வகையில் ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

    நல்லாட்சி என்னும் தத்துவத்தையே முழுமையாக அழித்துவிட்ட விக்ரமசிங்கேவின் ஆட்சியில் ஊழலும், வீண் செலவுகளும் பெருகி விட்டது. கூட்டு பொறுப்பு என்னும் அரசின் செயல்பாட்டை கேலிக்கூத்து ஆக்கும் வகையில் அனைத்து முடிவுகளையும் அவர் தன்னிச்சையாக எடுக்க தொடங்கி விட்டார்.

    அவருக்கும் எனக்குமான கொள்கை முரண்பாடுகள் நாளுக்குநாள் மிகப்பெரியதாக விரிவடைந்து கொண்டே போனது. இந்த கொள்கை முரண்பாடுகளும், எங்கள் இருவருக்கரும் இடையிலான கலாச்சார முரண்பாடுகளும் நமது நாட்டின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு காரணமாக அமைந்து விட்டது.

    மேலும், என்னையும் முன்னாள் மந்திரி கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல நடந்த சதித்திட்டம் தொடர்பான தகவலின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் விக்கிரமசிங்கே தவறி விட்டார் என்றும் மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.

    இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும், நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழலை கருதியும், என்னை கொல்ல நடந்த சதியை நினைத்தும், ராஜபக்சேவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு மாற்றுவழி எனக்கு தோன்றவில்லை என இலங்கை மக்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். #Srilanka #MaithripalaSirisena #RanilWickremesinghe
    வியட்நாமில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், எதிர்பாராத சந்திப்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். #SushmaSwaraj #RanilWickremesinghe #Vietnam
    ஹனாய்:

    ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார்.

    இங்கு இரண்டு நாட்கள் இருந்து ஆலோசனை மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அதைத்தொடர்ந்து, 29-ம் தேதி கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.



    இந்நிலையில், வியட்நாமில் இருக்கும் சுஷ்மா சுவராஜ் எதிர்பாராத விதமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பை அடுத்து, இருவரும் இருநாடுகளின் உறவு, மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். #SushmaSwaraj #RanilWickremesinghe #Vietnam
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இலங்கையின் நிரந்தரத்தன்மைக்கு பெருந்துணையாக இருந்தவர் என அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
    கொலும்பு:

    இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மிக மூத்த அரசியல் தலைவருமான வாஜ்பாய் தனது 93-வது வயதில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வாஜ்பாயின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இலங்கை அரசின் சார்பில் அந்நாட்டின் நெடுஞ்சாலை மற்றும் உயர்க்கல்வித்துறை மந்திரி லக்‌ஷ்மன் கிரியெல்லா டெல்லி வந்துள்ளார்.

    வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அவர் பெருந்துணையாக இருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    வாஜ்பாயின் மறைவுக்கு விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இலங்கையின் உண்மையான நண்பராக விளங்கிய திரு.வாஜ்பாயின் மரண செய்தி அறிந்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன்.

    2002-2004 ஆண்டுகளில் நான் பிரதமராக இருந்தபோது,  இலங்கையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.  அந்த உயர்ந்த மனிதருடன் நான் கொண்டிருந்த நட்பை எனது நினைவு கருவூலத்தில் என்றென்றும் பாதுகாத்திருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    ‘மிக உயர்ந்த மனித நேயரும், இலங்கையின் உண்மையான நண்பருமான வாஜ்பாயை நாம் இன்று இழந்துள்ளோம். ஜனநாயகத்தின் பாதுகாவலராக விளங்கிய முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் தொலைநோக்கு சிந்தனை கொண்ட பெரும் தலைவராக திகழ்ந்தவர்.

    அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார், மற்றும் உலகம் முழுவதும் உள்ள வாஜ்பாயின் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee  #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
    ×