search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசித்தனர்"

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.
    • ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையையொட்டி பூங்கா அமைந்துள்ளது. நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.

    சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடியும், சறுக்கு விைளயாடியும் மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணை மீனை சுடச்சுட ரசித்து சாப்பிட்டனர். பவானிசாகர் அணை பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல் இருசக்கர வாகனத்துக்கு ரூ.10-ம், காருக்கு ரூ.30-ம், பஸ், வேன்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.

    ×