search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுஸ்வேந்திர சஹால்"

    இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் சஹால், டோனி அவரிடம் தன்னை சார் என்று கூப்பிட வேண்டாம் என செல்லமாக கூறியதாக என தெரிவித்துள்ளார். #YuzvendraChahal #MSDhoni

    புதுடெல்லி:

    அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால். கடந்த 2016-ம் ஜிம்பாப்வே தொடரின்போது இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவர்களது சுழற்பந்துவீச்சு எதிரணிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக மாறியுள்ளனர். 

    இந்நிலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாஹல், டோனியுடன் பழகிய அனுபவங்கள் குறித்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் கடந்த 2016-ம் ஆண்டு, ஜிம்பாப்பே அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வாகி இருந்தேன். டோனி தான் எனக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புக் கொடுத்தார். அவருடன் முதல்முறையாக இணைந்து விளையாடுவதை எண்ணி மகிழ்ச்சியாகவும், பயமாகவும் இருந்தது. இதனால், டோனிக்கு எதிராக நின்று பேசுவதற்குக்கூட நான் பயந்தேன். எப்போதாவது அவருடன் பேச நேர்ந்தால், ‘டோனி சார்’ என்றுதான் அழைப்பேன். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகள் அனைத்திலும் டோனியை ‘டோனி சார்’ என்றே அழைத்தேன். 



    ஒருநாள் என்னிடம் பேசிய டோனி, நீ என்னை மகி, டோனி, மகேந்திர சிங் டோனி, அல்லது பாய் (அண்ணா) என எப்படி வேண்டுமோ அப்படிக் கூப்பிடு, ஆனால், தயவு செய்து சார் என்று மட்டும் கூப்பிடாதே என்று கூறினார். இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரிப்பதை பார்த்து டோனியும் சிரித்தார். அன்றுமுதல் டோனியை நான் மகி பாய் (மகி அண்ணா) என்று அழைத்து வருகிறேன்.

    இவ்வாறு சாஹல் தெரிவித்தார். #YuzvendraChahal #MSDhoni
    ×