search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி வாழ்த்து"

    மிசோரம் மாநில முதல்வராக பதவியேற்ற சோரம் தங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #MizoNationalFront #Zoramthanga #MizoramCM #Modi #Greeting
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது.



    இதையடுத்து மாநில ஆளுநரைச் சந்தித்த சோரம்தங்கா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்ற ஆளுநர், ஆட்சியமைக்க வரும்படி சோரம்தங்காவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மதியம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சோரம்தங்கா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    சோரம் தங்காவை தொடர்ந்து 11 மந்திரிகளும் பதவியேற்றனர். இதில் ஒருவரான தன்லுயாவுக்கு துணை முதல்-மந்திரி பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

    மிசோரமில் 3-வது முறையாக முதல்-மந்திரியாகி இருக்கும் சோரம் தங்கா, ஏற்கனவே 1998 மற்றும் 2003–ம் ஆண்டுகளிலும் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.

    இந்நிலையில், மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    "மிசோரம் முதல்-மந்திரி சோரம் தாங்காவிற்கு வாழ்த்துகள். அவரது பதவிக் காலங்களில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய வாழ்த்துகள். மக்களின் தேவையை அறிந்து நாட்டின் வளர்ச்சியை நோக்கி செயல்படுவோம்" இவ்வாறு பதிவிட்டுள்ளார். #MizoNationalFront #Zoramthanga #MizoramCM #Modi #Greeting 
    இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்ட் விளையாடுவதையொட்டி, ஆப்கான் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #IND #AFG #INDvAFG
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது.  இதையடுத்து அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    ‘ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுவதை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன். இதுபோன்ற விளையாட்டுக்கள் தொடர்ந்து இரு நாட்டு மக்களிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும்’ என்றும் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரகானே (கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.

    ஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஸ்டானி ஸ்காய் (கேப்டன்), அப்சர் சசாய், அமீர்கம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் -உர்- ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கான், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான். #IND #AFG #INDvAFG

    ×