search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதி"

    • ராசிபுரம் அருகே அடையாளம் தெரியாதவர் வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது60). இவர் ராசிபுரம் அருகே உள்ள பட்டணத்தில் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு ஓட்டலில் வேலையை முடித்துக்கொண்டு டவுன் பஸ்சில் வீட்டுக்குச் சென்றார்.

    ஆண்டகளூர் கேட் அருகே உள்ள சக்தி நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் வீட்டுக்கு செல்வதற்காக ரோட்டை கடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் இறந்த கந்தசாமிக்கு பழனியம்மாள் (55) என்ற மனைவியும் ரேவதி (30), மஞ்சுளா (28) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 

    • வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு, லட்சுமிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் குருவன். இவரது மனைவி சம்பாள் (வயது 60).

    சவம்பத்தன்று சம்பாள் வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் அடிபட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பாள் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×