search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் உத்தரவு"

    • பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்து தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒருகுரல் புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • விவரம் கேட்டு அதை தினமும் அறிக்கையாக தனக்கு அனுப்பி வைக்குமாறு மேயர் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்து தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒருகுரல் புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுவரை தெரிவித்த புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள புகார்கள் உள்ளிட்ட விவரங்களை மேயர் தினேஷ்குமார் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மையத்–துக்கு வந்த பொதுமக்கள் அழைப்பை மேயர், தொடர்பு கொண்டு பேசி குறைகளை கேட்டார்.

    2 ஆயிரத்து 90 புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முழு விவரங்களையும் தெரிவிக்குமாறு கூறினார். அதுபோல் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும், சரி செய்யப்படும்' என்று மழுப்பலாக பதில் தெரிவித்து அந்த புகார்களை முடித்து வைப்பதாக தகவல் வந்துள்ளது. அது–போன்று பதில் அளிக்கக்கூடாது. அதுபோன்ற புகார்களை மீண்டும் எடுத்து விசாரிக்க வேண்டும். பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டது என்பதற்கான புகைப்படத்தையும் இணைத்த பிறகே அந்த புகாரை முடித்து வைக்க வேண்டும். இதை கட்டளை மையத்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பது அவசியம்.

    புகார் அளித்தவர்களை போனில் தொடர்பு கொண்டு, புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதா? நடவடிக்கையில் திருப்தி உள்ளதா? என்று விவரம் கேட்டு அதை தினமும் அறிக்கையாக தனக்கு அனுப்பி வைக்குமாறு மேயர் உத்தரவிட்டார். ஒருகுரல் புரட்சி திட்டம் மீது மக்களின் நம்பிக்கை கெடாத வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • இளம் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி ஆணையாளர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வார்டு பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் இடங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியில்லாத பகுதிகள், கடந்த காலங்கள் முதல் தற்போது வரை மழைநீர் வெளியேற உரிய வடிகால் வச–தியில்லாத இடங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    அவ்வாறு பாதிப்பு ஏற்படும் மாநகராட்சியின் வடக்கு பகுதிகளான பாண்டியன்நகர், தோட்டத்துப்பாளையம், மும்மூர்த்திநகர், பாலன்நகர், அங்கேரிப்பாளையம், தெற்கு பகுதிகளான காசிபாளையம், கே.என்.பி. காலனி, சுப்பிரமணியம் நகர், திருவள்ளுவர் நகர், வீரபாண்டி பகுதிகளில் மழைக்காலத்தில் மழைநீர் முழுவதும் வெளியேறும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    தனியார் இடங்கள் வழியாக மழைநீர் வெளியேறும்போது இடத்தின் உரிமையாளரிடம், கவுன்சிலர்கள், தன்னார்வ உறுப்பினர்கள் உதவியுடன் நேரில் தொடர்பு கொண்டு மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி ஆணையாளர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.

    மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை அதிகமாக எதிர்பார்க்கப்படும் மாநகராட்சி பகுதிகளில் அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    ×