search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை நீர் திறப்பு"

    நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. #MetturDam

    மேட்டூர், ஜன. 28-

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாச னத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப் படுவது வழக்கம்.

    இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி அணையில் குறைவான தண்ணீர் இருந்ததால் தாமதமாக ஜூலை மாதம் 23-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்தாலும் சம்பா நெல் சாகுபடி முழுமையாக நடந்தது. ஆண்டுதோறும் பாசனத்திற் காக ஜனவரி 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.

    இதுபற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. இருந்தாலும் டெல்டா பாச னத்திற்கு தண்ணீர் தேவை என்றால் நீர் திறப்பு இன்னும் சில நாட்கள் நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 70.81 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 70.81 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கான 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    அணையில் தற்போது நீர்மட்டம் 70 அடியாக உள்ளதால் அணையில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலய கோபுரம் மற்றும் நந்தி சிலைகள் படிப்படியாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணை மூலம் 12 டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது வேலூர் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப் பாடு வராது என்று பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். * * * மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதை படத்தில் காணலாம்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி 5 ஆயிரத்து 471 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 14 அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 961 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 1000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் நேற்று வரை திறந்து விடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து மொத்தம் 1600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 102.32 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.67 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam
    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழை இல்லாததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது.

    இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. நேற்று அணைக்கு 6ஆயிரத்து 90கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 7ஆயிரத்து 158 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக 20ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று இரவு முதல் 22ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 1அடி குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 117.55 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 116.71 அடியாக குறைந்தது. இன்று காலை இதுமேலும் குறைந்து 115.88 அடியாக உள்ளது. #MetturDam
    ×