search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஹ்பூபா முப்தி"

    இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதற்கு ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி வரவேற்றுள்ளார். #MehboobaMufti
    ஜம்மு:

    இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் அனில் சவுகானும், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் சகிர் ஷம்சத் மிர்சாவும் நேற்று தொலைபேசியில் ‘ஹாட்லைன்’ வசதி மூலமாக பேசினர். எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லை ஆகிய இடங்களில் உள்ள நிலவரம் பற்றி ஆய்வு செய்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது, 2003-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிப்பது என்றும், இருதரப்பிலும் போர் நிறுத்த மீறலில் ஈடுபடுவது இல்லை என்றும் உடன்பாடு ஏற்பட்டது.

    இந்தநிலையில் இது குறித்து காஷ்மீர் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இந்த செய்தி ஆறுதலாக இருக்கும். இந்த போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் என நம்புகிறேன். எல்லையில் அமைதி நிலவுவது தான் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படுவதற்கான முதல் அடி என குறிப்பிட்டுள்ளார். #MehboobaMufti #India #Pakistan
    ×