search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ நபர்"

    மெக்சிகோவில் ஒரு நபர், விவாகரத்தான தன் மனைவி மீது சந்தேகமடைந்து அவரை வேவு பார்க்கப்போய் வசமாக மாட்டிக்கொண்டார். #MexicoMan
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் போர்டோ பெனஸ்கோ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறார். இருந்தபோதும் தனது மனைவி மீதான சந்தேகப்பார்வை குறையவில்லை. இதனால் தனது மனைவி என்ன செய்கிறாள் என்பதை வேவு பார்க்க திட்டமிட்ட அவர், மனைவியின் வீட்டின் அடியில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சித்துள்ளார்.

    அவரது உருவத்திற்கேற்ப துளையிடாததால் வசமாக மாட்டிக்கொண்ட அவர், உள்ளே நுழைய முடியாமலும் வெளியே வரமுடியாமலும் அவதிப்பட்டு உதவிக்கு சப்தமிட்டு அழைத்துள்ளார். தன் வீட்டிற்கு பின்புறம் இருந்து விசித்திரமான சத்தம் வருவதைக் கவனித்த அந்தப் பெண், பூனையாக இருக்கலாம் என நினைத்துள்ளார்.

    அதன்பின்னர் சத்தம் அதிகமாகவே, அந்தப்பெண் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு தன் வீட்டின் அடியில் சுரங்கப்பாதை தோண்டியிருப்பதும், அதனுள் முன்னாள் கணவர் சிக்கிக்கொண்டிருப்பதையும் அறிந்தார்.

    இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டனர். சுமார் 24 மணி நேரம் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #MexicoMan
    ×