search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகா பேரணி"

    கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். #MamataBanerjee #Megarally
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த காங்கிரஸ், அதே போன்று பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

    என்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளே மிகுந்த செல்வாக்குடன் இருப்பதால், அத்தகைய மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையின் கீழ் மாநில கட்சிகள் ஒருங்கிணையும் திட்டத்தை பெரும்பாலான மாநில கட்சிகள் ஏற்கவில்லை.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கோபத்தில் இருக்கும் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவும் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

    இந்த சூழ்நிலையில் பா. ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவை எதிர்க்கும் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.  இதற்காக நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்துள்ளனர்.


    அதன்படி, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று மதியம் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கியது. மம்தா தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சரத் பவார், தேவேகவுடா,  மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு,  குமாரசாமி,  அரவிந்த் கெஜ்ரிவால்,  பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பா.ஜனதா அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    தலைவர்கள் பேசுவதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தலைவர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும்.  இதைத் தொடர்ந்து தலைவர்கள் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் என்று தெரிகிறது. இது தவிர எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்குள் பேசி ஒருமித்த கருத்துக்கு வர உள்ளனர்.  இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒருமித்த கருத்து உருவாகாவிட்டால் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது கைகூடாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். #MamataBanerjee #Megarally
    மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொல்கத்தாவில் நாளை நடத்தும் பேரணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். #Rahulsupport #Mamatarally #brigaderally
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்தியில் நடைபெறும் மோடி தலைமையிலான அரசை வீழ்த்தவும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைக்கவும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

    அவ்வகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் நாளை சுமார் 30 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், இந்த பேரணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் தெரிவித்துள்ளதாவது:-

    மதங்களுக்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அப்பாற்பட்டு, ஒவ்வொரு தனிமனிதனின், பெண்ணின், குழந்தையின் குரலுக்கும் மதிப்பளிக்கப்படும் நாளைய இந்தியா உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா முழுவதும் சக்திவாய்ந்த அமைப்புகள் தலைதூக்க தொடங்கியுள்ளன. மோடி அளித்த போலி வாக்குறுதிகள் மற்றும் அவரது அரசு கூறிவரும் பொய்களால் ஏமார்ந்த பல்லாயிரம் கோடி மக்கள் இந்த சக்திவாய்ந்த அமைப்புகளில் இணைந்துள்ளனர்.

    மோடி அரசு அழிக்க நினைக்கும் ஜனநாயகத்தின் தூண்களையும், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க உண்மையான நாட்டுப்பற்று அவசியம் என்ற காங்கிரஸ் கட்சியின் சித்தாந்த நம்பிக்கையின் பக்கம் அனைத்து எதிர்க்கட்சிகளும் அணி திரண்டுள்ளன.

    இந்த சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல்லாண்டு காலமாக மேற்கு வங்காளம் மாநிலத்து மக்கள் முன்னணியில் இருந்துள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றிணைந்துள்ளது என்னும் செய்தியை வெளிப்படுத்தும் மம்தா பானர்ஜி தலைமையிலான நாளைய பேரணிக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார். #Rahulsupport #Mamatarally #brigaderally
    கொல்கத்தாவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் மெகா பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #OppositionRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மறுதினம் கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    மம்தாவின் அழைப்பை ஏற்று இந்த பேரணியில் சரத் யாதவ், ஸ்டாலின், பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஹஸ்வி யாதவ், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, நாளை மறுதினம் நடைபெறவுள்ள பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும். பா.ஜ.க 125 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரசை பற்றி தெரியவில்லை. பிராந்திய கட்சிகள் முடிவு எடுப்பதாக இருக்கும். பிராந்திய கட்சிகள் இரு கட்சிகளை விடவும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்தார். #MamataBanarjee #OppositionRally
    அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #BrigadeRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்காக அவர் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்தார்.

    மேலும், மெகா பேரணிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கும்படி கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். #MamataBanarjee #BrigadeRally
    ×